பெண்கள் கருவுற்று இருக்கும் போது பேறுகால விடுப்பு வழங்குவதை போல ஜப்பான், தென் கொரியா, தைவான், இந்தோனேசியா, ஜாம்பியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்பு என்பது வழங்கப்படுகிறது. மாதம்தோறும் தங்கள் மாதவிடாய் காலத்தில் அந்த விடுப்பை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் இது போன்ற ஒரு நடைமுறை கிடையாது.
தற்போதைய எர்ணாகுளம் மாவட்டம் திருப்புனித்துராவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில், 1912 ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் ஆண்டுத் தேர்வின் போது 'பீரியட் லீவ்' எடுக்க பழைய கொச்சின் சமஸ்தானம் உத்தரவிட்டது. விடுபட்ட ஆண்டுத்தேர்வை மாணவர்கள் பின்னர் எழுதிக்கொள்ளலாம். இந்த வழக்கம் இன்றும் உள்ளது. ஆனால் மற்ற பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இதுவரை அப்படி ஒரு நடைமுறை கிடையாது.
இதனால் பிஎச்டி உட்பட பல்வேறு பிரிவுகளில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட பெண் மாணவர்களின் நீண்டகாலக் கோரிக்கை பூர்த்தி ஆகியுள்ளது. இது உயர்கல்வி துறையில் எடுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அதே வேளையில் மிகவும் தேவையான முடிவு என்று மாணவர் சங்க தலைவர் நமீதா ஜார்ஜ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பள்ளி கல்வி, உயர்கல்வி, ஊடகம் என்று அணைத்து துறைகளிலும் மாதவிடாய் விடுப்பு கொடுத்துள்ள மாநிலமாக கேரளா மாறியுள்ளது.