வடமாநிலங்களில் மகர சங்கராந்தி எனும் பெயரில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு அதிகாலையிலேயே தர்ப்பணம் அளித்தனர். தொடர்ந்து, கங்கை நதியிலும் புனித நீராடினர். இதேபோல், கொல்கத்தாவின் ஹூக்ளி நதிக்கரையில் திரண்ட நூற்றுக் கணக்கான பொதுமக்கள், நதியில் நீராடி உயிரிழந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.