முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » கொச்சியில் அதிநவீன எலெக்ட்ரிக் படகுகள் மூலம் இணைக்கப்படும் 10 தீவுகள்... நீர் வழி மெட்ரோவில் சிறப்பம்சங்கள் என்ன?

கொச்சியில் அதிநவீன எலெக்ட்ரிக் படகுகள் மூலம் இணைக்கப்படும் 10 தீவுகள்... நீர் வழி மெட்ரோவில் சிறப்பம்சங்கள் என்ன?

கேரளாவில் கொச்சியில் நாட்டின் முதல் நீர் வழி செல்லும் மெட்ரோ சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

  • 18

    கொச்சியில் அதிநவீன எலெக்ட்ரிக் படகுகள் மூலம் இணைக்கப்படும் 10 தீவுகள்... நீர் வழி மெட்ரோவில் சிறப்பம்சங்கள் என்ன?

    கேரளாவின் கொச்சியில், மலபார் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த நீர் வழி மெட்ரோ சேவை அமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    கொச்சியில் அதிநவீன எலெக்ட்ரிக் படகுகள் மூலம் இணைக்கப்படும் 10 தீவுகள்... நீர் வழி மெட்ரோவில் சிறப்பம்சங்கள் என்ன?

    கொச்சி பகுதி அதிகமாக நீர் நிலைகளைக் கொண்டுள்ளது. நீர் வழியில் சுற்றி அமைந்துள்ள தீவுப்பகுதிகளை இணைப்பதன் மூலம் பயண நேரத்தைக் குறைக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 38

    கொச்சியில் அதிநவீன எலெக்ட்ரிக் படகுகள் மூலம் இணைக்கப்படும் 10 தீவுகள்... நீர் வழி மெட்ரோவில் சிறப்பம்சங்கள் என்ன?

    இந்த முழு மெட்ரோ திட்டம் மொத்தம் 38 முனையங்களுடன் 78 மின்சார படகுகள் கொண்டு செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    கொச்சியில் அதிநவீன எலெக்ட்ரிக் படகுகள் மூலம் இணைக்கப்படும் 10 தீவுகள்... நீர் வழி மெட்ரோவில் சிறப்பம்சங்கள் என்ன?

    முதல் கட்டமாக, உயர்நீதிமன்றம்-வைபின் முனையம் வரையும், வைட்டிலா-காக்கநாடு முனையம் வரையும் செயல்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. வைபின் முனையத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரை செல்ல வெறும் 20 நிமிடங்கள் தான் ஆகும் என்று கேரளா முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 58

    கொச்சியில் அதிநவீன எலெக்ட்ரிக் படகுகள் மூலம் இணைக்கப்படும் 10 தீவுகள்... நீர் வழி மெட்ரோவில் சிறப்பம்சங்கள் என்ன?

    பேட்டரி மூலம் இயக்கும் electric hybrid boats மூலம் இந்த மெட்ரோ சேவை இயக்கப்படுகிறது. 76.2 கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தப்படும் இந்த சேவை மூலம் பாதுகாப்பான சுகமான பயணத்தைப் பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 68

    கொச்சியில் அதிநவீன எலெக்ட்ரிக் படகுகள் மூலம் இணைக்கப்படும் 10 தீவுகள்... நீர் வழி மெட்ரோவில் சிறப்பம்சங்கள் என்ன?

    சுமார் ரூ.1,136.83 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கேரளா அரசு மற்றும் ஜெர்மன் நிறுவனமான KfW இணைந்து இத்திட்டத்திற்கான நிதியை வழங்கியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 78

    கொச்சியில் அதிநவீன எலெக்ட்ரிக் படகுகள் மூலம் இணைக்கப்படும் 10 தீவுகள்... நீர் வழி மெட்ரோவில் சிறப்பம்சங்கள் என்ன?

    நீர் மெட்ரோ சேவைக்குக் குறைந்தபட்சமாக ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Kochi One Card மூலம் டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து, இதற்கான டிக்கெட்களை ஆன்லைனில் Kochi One App மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 88

    கொச்சியில் அதிநவீன எலெக்ட்ரிக் படகுகள் மூலம் இணைக்கப்படும் 10 தீவுகள்... நீர் வழி மெட்ரோவில் சிறப்பம்சங்கள் என்ன?

    மேலும் போட்டின் உள்கட்டமைப்புகளில் ஏசி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. கேரளா சுற்றுலா தளத்திற்கு மிகவும் பெயர்பெற்ற இடம். படகு வழியில் நீர் வழி சுற்றுலா செல்ல வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலும் இருந்தும் மக்கள் கூட்டம் அலை மோதும். தற்போது கொண்டுவந்துள்ள இந்த மெட்ரோ சேவை மூலம் வெகு விரைவில் மக்கள் எளிமையாக நீர்ப் பகுதிகளில் பயணம் செய்யலாம்.

    MORE
    GALLERIES