பன்முகத்தன்மை கொண்டு இந்தியாவில் பல மொழி, கலாச்சார அம்சங்களை கொண்ட மக்களைப் போலவே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்ட பழங்குடி இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். 21ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான மக்கள் நவீன உலக வழக்கத்தில் வாழ்ந்தாலும், இந்த பழங்குடி இனங்கள் தங்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை மாறாமல் கடைபிடிக்கின்றனர்.
அப்படி ஒரு தனித்துவமான பன்பாட்டு பழக்க வழக்கத்தை கொண்டவர்கள் தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா என்ற பழங்குடி இன மக்கள். பொதுவாக நமது சமூகத்தில் காதலையே முழுமையாக ஏற்கும் பக்குவம் இல்லை. அப்படி இருக்க இந்த பழங்குடி மக்களோ, இளம் வயதினர் திருமணம் செய்யமலே பாலியல் உறவில் ஈடுபட அனுமதிக்கும் பழக்கத்தை ஒரு சடங்காகவே பின்பற்றுகின்றனர்.
Ghotul என்ற பாரம்பரியத்தை இந்த பழங்குடி மக்கள் பின்பற்றுகின்றனர். இந்த பழங்குடியின மக்கள் மூங்கிலால் ஒரு பெரிய குடில் வீட்டை உருவாக்குகிறார்கள், இதை நகரங்களில் உள்ள இரவு விடுதிகளுடன் ஒப்பிடலாம். இந்த மூங்கில் குடில் வீட்டில் தான் தங்கள் பாலியல் தேவை விருப்பத்தை அறிந்து கொள்ள அவர்களின் மூத்தோர் அனுமதிக்கிறார்கள்.