முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » “அய்ரூர் கதகளி கிராமம்”... கிராமத்தின் பெயருடன் நடனத்தின் பெயர் இணைந்த சுவாரஸ்ய வரலாறு..!

“அய்ரூர் கதகளி கிராமம்”... கிராமத்தின் பெயருடன் நடனத்தின் பெயர் இணைந்த சுவாரஸ்ய வரலாறு..!

கேரளாவில் கதகளி நடனத்திற்கு என 200 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கிராமத்தின் பெயர் தற்போது 'அய்ரூர் கதகளி கிராமம்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • 16

    “அய்ரூர் கதகளி கிராமம்”... கிராமத்தின் பெயருடன் நடனத்தின் பெயர் இணைந்த சுவாரஸ்ய வரலாறு..!

    இந்தியாவில் பல பகுதிகளுக்கு என தனித்துவமான பல அம்சங்கள் அடையாளங்கள் உண்டு. அப்படித்தான் மலையாள தேசமான கேரளாவுக்கு என தனித்துவமான அடையாளமாக பார்க்கப்படுவது அந்த மண்ணின் நடனமாக கருதப்படும் கதகளி.

    MORE
    GALLERIES

  • 26

    “அய்ரூர் கதகளி கிராமம்”... கிராமத்தின் பெயருடன் நடனத்தின் பெயர் இணைந்த சுவாரஸ்ய வரலாறு..!

    பராம்பரிய நடமான கதகளிக்காகவே என கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒரு கிராமம் உள்ளது. அய்ரூர் என்ற இந்த கிராமத்தை மக்கள் கதகளி கிராமாகவே பார்க்கின்றனர். இந்த கிராமத்தில் கதகளி நடனத்திற்கு சுமார் 200 ஆண்டு பாரம்பரியம் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    “அய்ரூர் கதகளி கிராமம்”... கிராமத்தின் பெயருடன் நடனத்தின் பெயர் இணைந்த சுவாரஸ்ய வரலாறு..!

    பொதுவாக கதகளி நடனம் என்பது இந்து புராண கதைகளை கூறுவதாகவே இருக்கும். ஆனால் இந்த அய்ரூர் கிராமத்தில் கிறிஸ்துவ மதத்தினருகாகவும் கதகளி நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது. பைபிளில் வரும் ஆபிரகாமின் தியாகம், ஊதாரி குமாரன், மக்தலேனா மரியாள் போன்ற கதைகள் இங்கு கதகளி நடனமாக அரங்கேற்றப்பட்டு கிறிஸ்துவ மக்களிடமும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    “அய்ரூர் கதகளி கிராமம்”... கிராமத்தின் பெயருடன் நடனத்தின் பெயர் இணைந்த சுவாரஸ்ய வரலாறு..!

    இத்தகைய பாரம்பரியம் கொண்ட இந்த அய்ரூர் கிராமத்தின் பெயரை கதகளியுடன் அடையாளப்படுத்தும் வகையில் பெயர் மாற்ற நீண்ட கால கோரிக்கை இருந்து வந்தது. 2010இல் இந்த கிராம பஞ்சாயத்து கிராமத்தின் பெயரை 'அய்ரூர் கதகளி கிராமம்' என மாற்ற தீர்மானம் கொண்டு வந்தது.

    MORE
    GALLERIES

  • 56

    “அய்ரூர் கதகளி கிராமம்”... கிராமத்தின் பெயருடன் நடனத்தின் பெயர் இணைந்த சுவாரஸ்ய வரலாறு..!

    இருப்பினும் பல்வேறு சட்ட சிக்கல் மற்றும் நடைமுறைகள் காரணமாக பெயர் மாற்ற கோரிக்கை நிறைவேறாமல் 12 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு கிராம நிர்வாகம் தொடர்பாக தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 66

    “அய்ரூர் கதகளி கிராமம்”... கிராமத்தின் பெயருடன் நடனத்தின் பெயர் இணைந்த சுவாரஸ்ய வரலாறு..!

    கிராம பஞ்சாயத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று 2018இல் மாநில அரசு பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கியது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சர்வே அலுவலகமும் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கி கிராமத்தின் அஞ்சல் அலுவக பெயரை மாற்றி தந்துள்ளன. இதன் மூலம் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான 'அய்ரூர் கதகளி கிராமம்' என்ற பெயர் மாற்றம் நிறைவேறியுள்ளது.

    MORE
    GALLERIES