முகப்பு » புகைப்பட செய்தி » சாதா பானிபூரிக்கு போட்டியாக வரும் ஜாம்நகர் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’!

சாதா பானிபூரிக்கு போட்டியாக வரும் ஜாம்நகர் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’!

பானிபூரியுடன், நவரத்ன ரசம், அமிர்த ரசம் மற்றும் ஹஜம்ஹஜம் ரசம் என்ற மூன்று வகையான சுவையூட்டப்பட்ட நீர் வழங்கப்படுகிறது.

  • 16

    சாதா பானிபூரிக்கு போட்டியாக வரும் ஜாம்நகர் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’!

    நம் ஊரில் பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பிரெஞ்சு பிரைஸ் என்று எதனை வெளிநாட்டு துரித உணவுகள் வந்தபோதிலும், நம் நாட்டு பானிபூரியை அடித்துக்கொள்ள முடிவதில்லை. எந்த தெருவில் எந்த மூலையில் பானிபூரி கடை இருந்தாலும் அங்கு ஒரு மக்கள் இருந்துகொண்டே தான் இருக்கும். இது பார்த்தாலே வாயில் எச்சில் ஊற வைக்கும் உணவு.

    MORE
    GALLERIES

  • 26

    சாதா பானிபூரிக்கு போட்டியாக வரும் ஜாம்நகர் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’!

    பானிபூரியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால்  குஜராத்தில் உள்ள ஜாம்நகரில்  ஒரு அமைப்பு, இந்த பானிபூரியிலேயே ஒரு புதிய வித்யாசத்தை கொண்டுவந்துள்ளது. ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆயுர்வேத பானிபூரி வகையை உருவாக்கியுள்ளது

    MORE
    GALLERIES

  • 36

    சாதா பானிபூரிக்கு போட்டியாக வரும் ஜாம்நகர் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’!

    ஜாம்நகரில் உள்ள ஒரு ஆயுர்வேத நிறுவனத்தில் படிக்கும் மருந்தியல் மாணவி, த்ரிஷா வகேலாவின் சிந்தனையில் உருவானது தான் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’ என்கிற புதுவகை பானிப்பூரி. ராகி, கம்பு, ரவை, பாசிப்பருப்பு போன்ற தானியங்களை வைத்து இந்த பூரி தயாரிக்கப்படுகிறது.அது மட்டும் இல்லாமல் உடலுக்கு நம்மை பயக்கும் சில ஆயூர்வேத மூலிகைகளும் சேர்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    சாதா பானிபூரிக்கு போட்டியாக வரும் ஜாம்நகர் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’!

    ஆயுர்வேத சன்ஸ்தானால் ஜாம்நகரில் 60,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட மூன்று நாள் ஆரோக்கியம் மற்றும் தினை உணவுகள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சன்ஸ்தானின் மாணவர்கள், தினையின் பல சுவையான உணவுகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். அதில் த்ரிஷா வகேலாவின் அவுர்வேதி ஜல்பூரிகாவை பலரும் சுவைத்து நல்ல பீட்பேக் கொடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 56

    சாதா பானிபூரிக்கு போட்டியாக வரும் ஜாம்நகர் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’!

    பானிபூரியுடன், நவரத்ன ரசம், அமிர்த ரசம் மற்றும் ஹஜம்ஹஜம் ரசம் என்ற மூன்று வகையான சுவையூட்டப்பட்ட நீர் வழங்கப்படுகிறது. புதினா, புளி போன்ற பொருட்களைக் கொண்டு நவரத்தின ரசம் தயாரிக்கப்படுகிறது. இது நவரத்ன ரசத்தை மேலும் சுவை கூடுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    சாதா பானிபூரிக்கு போட்டியாக வரும் ஜாம்நகர் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’!

    அமிர்த ரசத்தில், பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. ஹஜாம்ஹஜாமில், இஞ்சி மற்றும் ஒத்த மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த ரசத்தின் சுவை சாதாரண பானிப்பூரி ரசத்தை அடித்து நொறுக்கி ஆரம்பத்திலேயே அதற்கான ரசிகர்களை சேர்த்து வருகிறது.

    MORE
    GALLERIES