வைஷ்ணோ தேவி யாத்திரை மார்ச் 18-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் குமார் இன்று முதல் யாத்திரை தொடங்குவதாக அறிவித்திருந்தார். முதல் வாரத்தில் தினமும் 2,000 யாத்திரிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள். இதில் 1,900 பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் 100 பேர் வெளி மாநில யாத்திரிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைன் பதிவு செய்து கொள்ள வேண்டும், யாத்திரை பதிவு இடத்தில் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காகவே இந்த வசதி செய்யப்பட்டது.யாத்திரிகர்கள் ஆரோக்கிய சேது ஆப்பை தங்கள் மொபைல் போனில் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் அவசியம் அணிந்திருக்க வேண்டும். தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்கள் உடல் நிலை பரிசோதிக்கபட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்தது.