ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் பராமரிப்பு பணிகள் காரணமாக செயல்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று (06-03-19) அதிகாலை 12 மணி முதல் நாளை (07-03-19) காலை 6 மணிவரை இணையதளம் இயங்காது. இந்த நாட்களில் டிக்கெட் புக் செய்யவோ, கேன்சல் செய்யவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி மொபைல் ஆப் மூல ம் டிக்கெட் புக் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பேர் பயன்படுத்தும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களில் ஒன்றாக இருக்கிறது.