முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், பல்வேறு முனைகளில் இருந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வருவதாகக் கூறினார். வரையறுக்கப்படாத எல்லைப்பகுதிகளில் எல்லைகளை மாற்றியமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக சீனாவை மறைமுகமாக சாடினார். இருப்பினும், இந்தியா விழிப்புடன் இருப்பதாகவும், இந்திய நிலப்பரப்பு மற்றும் மக்களுக்கு எதிரான செயல்களை எந்த விலை கொடுத்தாவது முறியடிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதிபடக் கூறினார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், போயிங், லாஹீட் மார்ட்டின், டசால்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இடம்பெறச் செய்துள்ளன. இதேபோன்று, இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும், இஸ்ரேல் தயாரிப்பான ராம்பேஸ் ஏவுகணை, பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை, எஸ்யு-30எம்கேஐ போர் விமானம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. செயற்கைகோள் பயன்பாட்டு பொருட்கள், வானிலும், தரையிலும் பயன்படுத்தக் கூடிய அலைக்கற்றை கருவி என 30 பொருட்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.