முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

ராணுவத்தை அடுத்த 8 ஆண்டுகளில் நவீனமயமாக்குவதற்காக 9 லட்சம் கோடி செலவிடப்படும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

  • 19

    இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

    ஏரோ இந்தியா விமான கண்காட்சி கர்நாடக மாநிலம் பெங்களூரில் எலஹங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. ஆசிய அளவில் மிகப் பெரிய விமான கண்காட்சியான இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

    MORE
    GALLERIES

  • 29

    இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

    விமானப்படையை சேர்ந்த 3 எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் தேசிய கொடியுடன் வானில் பறந்தன.

    MORE
    GALLERIES

  • 39

    இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

    முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், பல்வேறு முனைகளில் இருந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வருவதாகக் கூறினார். வரையறுக்கப்படாத எல்லைப்பகுதிகளில் எல்லைகளை மாற்றியமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக சீனாவை மறைமுகமாக சாடினார். இருப்பினும், இந்தியா விழிப்புடன் இருப்பதாகவும், இந்திய நிலப்பரப்பு மற்றும் மக்களுக்கு எதிரான செயல்களை எந்த விலை கொடுத்தாவது முறியடிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதிபடக் கூறினார்.

    MORE
    GALLERIES

  • 49

    இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

    ராணுவத்தை அடுத்த 8 ஆண்டுகளில் நவீனமயமாக்குவதற்காக 9 லட்சம் கோடி செலவிடப்படும் என்றும், பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீடுகளுக்கு 74 சதவிகிதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் இந்தியாவில் முதலீடு செய்யும் நிலை ஏற்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 59

    இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், போயிங், லாஹீட் மார்ட்டின், டசால்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இடம்பெறச் செய்துள்ளன. இதேபோன்று, இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும், இஸ்ரேல் தயாரிப்பான ராம்பேஸ் ஏவுகணை, பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை, எஸ்யு-30எம்கேஐ போர் விமானம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. செயற்கைகோள் பயன்பாட்டு பொருட்கள், வானிலும், தரையிலும் பயன்படுத்தக் கூடிய அலைக்கற்றை கருவி என 30 பொருட்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 69

    இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

    ஏரோ இந்தியா விமான கண்காட்சி

    MORE
    GALLERIES

  • 79

    இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

    ஏரோ இந்தியா விமான கண்காட்சி

    MORE
    GALLERIES

  • 89

    இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

    ஏரோ இந்தியா விமான கண்காட்சி

    MORE
    GALLERIES

  • 99

    இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் பெங்களூரு விமான கண்காட்சி...

    ஏரோ இந்தியா விமான கண்காட்சி

    MORE
    GALLERIES