11, 12ஆம் வகுப்புகளை ஒன்றாக படித்து, கல்லூரியிலும் ஒரே வகுப்பில் படித்து வந்த நிலையில், உடன் படிக்கும் மாணவி மீது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நவீன் அந்த பெண்ணிடம் காதலை சொல்ல இருவரும் இரண்டு ஆண்டுகள் காதல் உறவில் இருந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் பிரேக் அப் ஆன நிலையில், ஹரிஹரி கிருஷ்ணா அந்த பெண்ணிடம் காதலை சொல்லி இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.
இருப்பினும் நவீன் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தனது காதலியுடன் ஹரிஹர கிருஷ்ணா இருக்கும் போது அவருக்கு நவீன் இடம் இருந்து செல்போன் வாயிலாக தொடர்ந்து அழைப்பு வந்துள்ளது. இது ஹரிஹரி கிருஷ்ணாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலியுடன் முன்னாள் காதலன் தொடர்ந்து பேசி வருவதை பொறுக்க முடியாமல், நவீனை கொலை செய்ய ஹரிஹர கிருஷ்ணா திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்பேரில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி பார்ட்டி இருப்பதாக கூறி அப்துல்லாபூர்மெட் பகுதியில் தனது வசிப்பிடத்திற்கு நவீனை ஹரிஹர கிருஷ்ணா வர வழைத்துள்ளார். அப்போது இது தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்து வாக்குவாதம் சண்டையாக மாறியதில் ஹரிஹர கிருஷ்ணா முன்னாள் காதலன் நவீனை கொலை செய்துள்ளார். அத்தோடு நிற்காமல் நவீனின் கை விரல், இதயம், அந்தரங்க உறுப்பு ஆகியவற்றை வெட்டி அதை புகைப்படம் எடுத்து காதலிக்கு அனுப்பியுள்ளார். முதலில் ஏதோ பிராங்க் செய்கிறார் என நினைத்த காதலி பின்னர் தான் உண்மையை உணர்ந்துள்ளார்.