முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » உஷார்..ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

உஷார்..ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

Helmet Must | சுமார் 30.1 சதவீத உயிரிழப்புகள் மற்றும் படுகாயம் ஏற்படுத்திய 26 சதவீத விபத்துகள் ஆகியவை ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்பட்டதாகும். இதனால் தான், மோட்டார் வாகன சட்டம் 1998 விதிகளை திருத்தம் செய்து, மேம்பட்ட விதிகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

  • 16

    உஷார்..ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

    டாடா குழும நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர் சைரஸ் மிஸ்திரி அண்மையில் சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து, சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வாகனங்களை அதிவேகமாக இயக்குவது முதல் மது அருந்தி வாகனம் ஓட்டுவது வரையில் விபத்துகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் மூலமாக உயிரிழந்தவர்களில் 11 சதவீதம் விபத்துகள் என்பது சீட் பெல்ட் அணியாமல் சென்றதன் காரணமாக ஏற்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    உஷார்..ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

    ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதம் வர வாய்ப்பு உண்டு
     ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை முறைப்படி அணிய தவறினாலும் அபராதம் உண்டு என்பது பலருக்கும் தெரியாத தகவலாக உள்ளது. அதாவது ஹெல்மெட்டில் உள்ள ஸ்டிராப்-ஐ நீங்கள் முறையாக அணிந்திருக்க வேண்டும். ஒருவேளை ஸ்டிராப் போடாவிட்டால் அந்த பயணி ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிவதும் குற்றச் செயலாகும். கண்களை மறைக்கும் வகையில் கண்ணாடி இருக்க வேண்டும். பிஐஎஸ் சான்றிதழும் அவசியம்.

    MORE
    GALLERIES

  • 36

    உஷார்..ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

    குழந்தைகள் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்
    குழந்தைகளும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு பெல்ட் பயன்படுத்தப்படுவது அவசியமாகும். குழந்தைகளுடன் செல்லும் இரு சக்கர வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் தான் பயணிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் பட்சத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 46

    உஷார்..ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

    அதிக சுமை ஏற்றினால் ரூ.20 ஆயிரம் அபராதம்
    வாகனங்களில் மிக அதிகமான பாரம் ஏற்றிச் சென்றால் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக வாகன ஓட்டுநர் கூடுதலாக ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

    MORE
    GALLERIES

  • 56

    உஷார்..ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

    சர்வதேச ஓட்டுநர் உரிமம்
    நாடெங்கிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு மாதிரியான லைசென்ஸ் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இந்த உரிமம் என்பது 102 நாடுகளில் செல்லுபடியாகும். இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல் இருக்காது.

    MORE
    GALLERIES

  • 66

    உஷார்..ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

    ஓட்டுநர் உரிமத்துடன் க்யூஆர் கோடு
    புதிய லைசென்ஸில் இண்டர்நேஷனல் டிரைவிங் பெர்மிட் குறியீடு அல்லது க்யூஆர் கோடு ஆகியவை இடம்பெற உள்ளது. அது ஓட்டுநர் தொடர்பான அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும். இதனால், அதை சரி பார்ப்பது எளிமையானதாக இருக்கும்.

    MORE
    GALLERIES