ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் சாலைகளில் வெள்ளநீர் ஆறுகள் போல ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள், குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஆகியவற்றை மழை வெள்ளம் அடித்துச் சென்ற காட்சிகளை காணமுடிந்தது.