முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

மல்யுத்த வீரராக வாழ்க்கையை தொடங்கிய முலாயம் சிங் யாதவ் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்ததுடன், தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார். அவரது வாழ்க்கை பயணத்தை இந்த கட்டுரை விளக்குகிறது.

  • 112

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    மல்யுத்த வீரராக வாழ்க்கையை தொடங்கிய முலாயம் சிங் யாதவ் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்ததுடன், தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார். அவரது வாழ்க்கை பயணத்தை இந்த கட்டுரை விளக்குகிறது.

    MORE
    GALLERIES

  • 212

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    1939-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த முலாயம் சிங் யாதவ், அடிப்படையில் ஒரு மல்யுத்த வீரர் ஆவர். ஆசிரியரான பிறகு முலாயம் மல்யுத்தத்தை முற்றிலுமாக கைவிட்டார். ஆனால் தனது வாழ்நாள் இறுதி வரை அவர் தனது கிராமமான சைஃபியில் மல்யுத்த போட்டிகளை நடத்தி வந்தார்.

    MORE
    GALLERIES

  • 312

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    ராம் மனோகர் லோஹியாவால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்த முலாயம் உத்தரபிரதேச அரசியலின் முக்கியமான முகமாக உருவெடுத்தார். 1967 இல் சம்யுக்த் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக ஜஸ்வந்த்நகர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முலாயமுக்கு வயது 28

    MORE
    GALLERIES

  • 412

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    சோசலிசத் தலைவராக அறியப்பட்ட முலாயம், உ.பி-யில் காங்கிரஸ் வலுவிழந்தபின் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தைக் கைப்பற்றி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். உத்தர பிரதேசத்தில் ராம் நரேஷ் யாதவ் தலைமையில் 1977-ம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது, முலாயம் சிங் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

    MORE
    GALLERIES

  • 512

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    சரண் சிங் மறைவுக்கு பிறகு முலாயம் சிங்குக்கு உத்தர பிரதேச முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. 1989-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட முலாயம், ஓர் ஏழை மகனை முதல்வராக்க வேண்டும் என்ற ராம் மனோஹர் லோஹியாவின் கனவு நனவாகி விட்டதாக கண்ணீர் மல்க கூறினார்.

    MORE
    GALLERIES

  • 612

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    1990 நவம்பர் 2-ம் தேதி பாபர் மசூதியை நோக்கி கரசேவகர்கள் செல்ல முயன்றபோது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் சில கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். பாபர் மசூதிக்கு அருகே பறவை கூட பறக்கமுடியாது என்று முலாயம் சிங் சொன்ன வாக்கியம் அவரை முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமாக்கியது.

    MORE
    GALLERIES

  • 712

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    1992 அக்டோபர் 4-ஆம் தேதி அவர் சமாஜ்வாதி கட்சியை நிறுவினார். பாஜகவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த அவர் கான்ஷி ராமின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்தார். 1993 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் முலாயம் சிங் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து 2003 ஆண்டு மூன்றாவது முறையாக முதலமைச்சரானார்

    MORE
    GALLERIES

  • 812

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    1996-ல் முலாயம் சிங் யாதவ் முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்டார். 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ கௌடா மற்றும் ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். பிரதமர் பதவியில் இருந்து தேவ கெளடா ராஜினாமா செய்த பிறகு, முலாயம் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது போட்டியாளரான லாலு பிரசாத் யாதவ் அவருக்கு இடையூறு ஏற்படுத்தியதால் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனது.

    MORE
    GALLERIES

  • 912

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    2008-ம் ஆண்டு அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப்பெற்றபோது, மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவளித்து அரசை காப்பாற்றினார்

    MORE
    GALLERIES

  • 1012

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    2012 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முலாயம் சிங் தனது மகன் அகிலேஷ் யாதவை தனது வாரிசாக்கினார். உட்கட்சி பூசல், மகன் உயர்த்திய போர்க்கொடி என நெருக்கடிகள் ஒருபுறம் வயது முதிர்வு மறுபுறம் என முடங்கிய முலாயம் சிங் யாதவ் கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில் மைன்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவையில் ஒருமுறை மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று முலாயம் சிங் யாதவ் கூறியது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்திற்குள்ளானது.

    MORE
    GALLERIES

  • 1112

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    1967-ம் ஆண்டு தொடங்கிய அரசியல் பயணித்தில் மூன்று முறை முதலமைச்சராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 10 முறை சட்டமன்ற உறுப்பிராகவும் முலாயம் சிங் இருந்துள்ளார். நேதாஜி என உத்தரபிரதேச மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ் நெருக்கடி காலகட்டத்தில் 19 மாதம் சிறைவாசம் அனுபவித்தவர்.

    MORE
    GALLERIES

  • 1212

    மல்யுத்த வீரர் முதல் உ.பி முதல்வர் வரை - முலாயம் சிங் யாதவ் வாழ்க்கை பயணம்

    1957-இல், முலாயம் சிங் யாதவ் மாலதி தேவியை மணந்தார். 2003இல் அவர் இறந்த பிறகு முலாயம் சிங் யாதவ் சாதனா குப்தாவை மணந்தார். மறைந்த முலாயம் சிங்குக்கு அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் என்ற இரு மகன்கள் உள்ளனர். முலாயம் சிங்கின் இரண்டாவது மனைவி கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.

    MORE
    GALLERIES