டெல்லிக்குள் நுழையும் பிரதான எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிபூர் வழியாக லட்சக்கணக்கான விவசாயிகள் தடைகளை அகற்றி பேரணியை தொடங்கினர். ஐடிஓ அருகே இருந்த போலீஸ் வாகனத்தை விவசாயிகள் தாக்கினார். (Image: News18) காசிப்பூர் எல்லையில் தடுப்புகளை உடைக்க முயன்ற விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். (Image: PTI) விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் செங்கோட்டைக்கு வெளியே இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். (Image: News18) விவசாயிகள் டெல்லி செங்கோட்டை கொத்தளத்தைக் கைப்பற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம். (Image: News18) டெல்லி செங்கோட்டை முன்பு வாகனத்தில் விவசாயிகள். (Image: News18) டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். (Image: News18) ஐ.டி.ஓவில் கவிழ்ந்த டிராக்டருக்கு அருகில் விவசாயிகள் நின்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம். (Image: PTI) சிங்கு எல்லையில் போலீஸ் தடுப்புகளை உடைத்த பின்னர் விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் சவாரி செய்யும் சக விவசாயிகள் மீது மலர்களை தூவினர்.(Image: PTI) டிராக்டர் மோதி விபத்துக்கு உள்ளானதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். (Image: PTI) விவசாயிகள் தங்களின் கொடிகளை செங்கோட்டையில் ஏற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்.(Image: PTI)