கொரோனா சிகிச்சை பெற்று வந்த சசிகலா கடந்த சில நாட்களாக எந்த அறிகுறியும் இல்லாததால் இன்று மதியம் 12 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விக்டோரியா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சசிகலா சில நாட்கள் வீட்டு தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால பெங்களூருவில் அவர் தங்கி உள்ளார். இதனிடையே மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிடம் உடல்நிலை குறித்து கேட்ட போது நல்லாயிருக்கேன் என்று சைகை மூலம் தெரிவித்தார். சசிகலா தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டு விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா