டெல்லி-மும்பை விரைவுச் சாலை சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்பில் 1,386 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலையான இது, டெல்லி-மும்பை இடையிலான தொலைவை 12 சதவீதம் அதாவது சுமார் 130 கிலோ மீட்டர் குறைத்து, பயண நேரத்தை 50 சதவீதம் குறைக்கக்கூடியது. அதாவது தற்போது 24 மணி நேரமாக உள்ள பயண நேரம் 12 மணி நேரமாக குறைந்துவிடும்.
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த சாலை கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா, சூரத் உள்ளிட்ட நகரங்களை இணைக்கிறது. முக்கியமான 8 விமான நிலையங்கள், 13 துறைமுகங்களுக்கு பயனுள்ள வகையில் அமைக்கப்படும் இந்த சாலை நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு முக்கிய பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.