இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 848 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளது. 7,04, 348 பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 24,00,000ஐ கடந்து 24,04,585 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 58,390 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3, 68, 27,520 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 9,25,383 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.