அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநிலம் முழுமையும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து பைபர் படகுகள் மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிப்போரை மீட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் வீடுகளை இழந்து உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வெள்ளத்தில் பொதுமக்கள் மட்டும் அல்லாது விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சூழ்ந்து கிடக்கும் வெள்ளநீரில் எங்கு செல்வது என தெரியாமல் திகைத்து நிற்கும் யானை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் கார்கள் வெள்ளத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொதுமக்கள் வெள்ளத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொதுமக்கள் மழை மற்றும் நிலச்சரிவால் ஏராளமான சாலைகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை காக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும் மழை, வெள்ளத்தால் 9.26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மனிதர்களை மட்டும் அல்லாமல் விலங்குகளும் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளது.