வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பீகாரை சேர்ந்த தேநீர் வியாபாரி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பீகார் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், முசாபர்பூரை சேர்ந்த தேநீர் வியாபாரி ஒருவர், வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய சட்டையை அவர் அணிந்துள்ளார்.