மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் 5 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் 26 மணி நேரத்துக்கு பிறகு மூதாட்டி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மகத்டவுனில் கடந்த 24ம் தேதி மாலை தாரிக் கார்டன் கட்டடம் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். 7 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 15 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 26 மணிநேரத்துக்கு பிறகு ஒரு மூதாட்டியும், 4 வயது சிறுவனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.