முகப்பு » புகைப்பட செய்தி » நாமக்கல் » மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!

மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும். இந்த இடங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் எப்போதும் நினைவில் தங்கியிருக்கும் இடமாகவும் இருக்கும்.

  • Local18
  • 18

    மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!

    நீங்கள் மாவட்டத்திற்கு சென்று, கட்டாயம் இங்குள்ள இயற்கை எழிலார்ந்த சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்து ரசிக்க வேண்டும். இந்த இடங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் எப்போதும் நினைவில் தங்கியிருக்கும் இடமாகவும் மீண்டும் மீண்டும் வருவதற்கு தூண்டும் இடமாகவும் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 28

    மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலைதான் அந்த இடம். இந்த மலைக்குச் செல்ல 70 கொண்டை ஊசி வளைவுகளை நீங்கள் கடக்க வேண்டியதாக இருக்கும். வழிநெடுக இயற்கை காட்சிகளையும், பசுமைகளையும் பார்த்து ரசிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 38

    மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!

    கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள ஆகாய கங்கை அருவியானது. அடடா என்னே அழகு என்று வியக்கவைக்கும். மூலிகை தன்மையுடன் கொட்டும் அந்த அருவியில் குளித்து மகிழலாம். இந்த அருவி 140 அடி உயரத்தில் இருந்து கொட்டும் பேரழகை பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 48

    மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!

    இங்கிருக்கும் அறப்பளீஸ்வரர் கோவில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்று வருவது பலருக்கும், மனதிற்கு பிடித்தமானதாகவும் பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 58

    மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!

    இங்கியிருந்து அடுத்ததாக 5 கி.மீ தொலைவிலுள்ள மாசிலா அருவிக்கு செல்லலாம். அதன் அழகும் பெயருக்கேற்ப மாசு இல்லாத தூய்மையானதுமான அந்த மாசிலா  அருவி. கொல்லிமலையில் உள்ள மூலிகைகளை கொண்டு வரும் அருவி என்று பலரும் போற்றுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 68

    மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!

    இந்த மலையில் இருந்து கீழே செல்லும் வழியில் வாசலூர்பட்டி அமைந்திருக்கிறது. இங்கே சுடசுட சுவையான மூலிகை சூப் கிடைக்கும். அத்துடன் படகு சவாரியும் செய்யலாம். பாதுகாப்பான படகு சவாரியை மேற்கொள்ள இந்த இடம் சிறந்தது என்கின்றனர் சுற்றுலா பயணிகள். இதற்கான கட்டணம் 50 ரூபாய். அருகிலேயே தாவரவியல் பூங்காவும் அமைந்துள்ளது. இந்த இடம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    MORE
    GALLERIES

  • 78

    மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!

    மலையைவிட்டு கீழ் இறங்கும்போது, செம்மேட்டில் உள்ள கடைகளில், பலா, அன்னாசி , வாழை, ஏலக்காய், மிளகு, தேன் என கொல்லிமலையில் விளையும் பல விளை பொருள்கள் அங்கு விற்கப்படுகின்றன. இதனை வாங்கி வரலாம்.

    MORE
    GALLERIES

  • 88

    மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!

    இந்த பொருட்கள் தரமாகவும், விலையும் குறைவாக இருப்பதாக பலரும் சொல்கின்றனர். மீண்டும் 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து நீங்கள் அந்த அழகிய மலையின் அழகை ரத்துக்கொண்டும், அதற்றினி நினைவுகளை சுமந்தபடியும் திரும்பலாம்.

    MORE
    GALLERIES