முகப்பு » புகைப்பட செய்தி » Namakkal » Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

Namakkal | நாமக்கல் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாப் பகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். குடும்பத்துடன் சென்று மகிழுங்கள்.

  • 112

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    நாமக்கல் மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது கொல்லிமலை தான். ஏனென்றால் மூலிகைகளின் அரசனாகவும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் சிறந்த ஒன்றாக விளங்கும் கொல்லிமலை வருவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் விருப்பபடுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 212

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    இந்த கொல்லிமலையானது நாமக்கல் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகவும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு செல்ல வேண்டும் என்றால் நாமக்கல் நகரத்திலிருந்து 45 கி.மீ தொலைத்தூரம் பயணிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 312

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    கொல்லிமலை மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைச் செடிகளுக்கு என்றே சிறந்து விளங்குகிறது. இங்குள்ள அறப்பலீசுவரர் கோவில், தோட்டக்கலை தோட்டம், மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், பெரியசாமி கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் போன்ற சுற்றலா பயணிகளை கவரும் இடங்கள் உள்ளது. ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் மாத்ததில் இங்கு வல்வில் ஓரி திருவிழா கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 412

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    நாமக்கல் கொல்லிமலையின் நுழைவுவாயில்

    MORE
    GALLERIES

  • 512

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் இருக்கிறது. அழகிய மலையின்மீது அமைந்துள்ள அற்புதமான திருக்கோயில் இது. அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலமாக சிறந்த விளங்குகிறது. மேலும் கோடு என்றால் மலை என்றும் மலையுச்சி என்றும் அர்த்தம்.

    MORE
    GALLERIES

  • 612

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    செங்கோடு, செங்குன்றம், செம்மலை என பல பெயர்களுடன் திகழ்கிறது திருச்செங்கோடு. இந்த திருச்செங்கோட்டையே உலகம் அறியும் செய்யும் வகையில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில். இக்கோயில் திருவிழா வைகாசி விசாக தேர்த்திருவிழாவாக வெகு விமரிசையாக நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 712

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    அர்த்தநாரீஸ்வரர் கோயில் மிகவும் புகழ் வாய்ந்த ஒன்றாகும்.

    MORE
    GALLERIES

  • 812

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    நாமக்கல் மாவட்டத்தில் குதித்து கும்மாளம் போட எங்காவது வெளியே செல்லனும் நினைத்தால் நிச்சயமாக இந்தக் இடத்திற்கு சென்று நேரத்தை செலவிட உகந்ததாக இருக்கும். பரமத்தி வேலூர் அருகே அமைந்துள்ள ஜேடர்பாளையம் படுகை அணை மற்றும் ராஜவாய்க்கால். இது விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று சந்தோஷமாக இருக்க உகந்த ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 912

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    ஏனென்றால் ராஜவாய்க்கல், சினிமா படங்களில் வருவது போலா படுகை அணை, மற்றும் அணைக்கட்டு, பூங்கா என பல விசயங்கள் உள்ளது. கண்டிப்பாக நாமக்கல் மாவட்டத்திறக்கு வருகை தருபவர்கள் இந்த இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு உகந்த இடமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 1012

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் மகிழ்ச்சியாக வந்து செல்லும் இடமாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 1112

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    இதேபோல் மற்றொரு இடமும் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறது. ஒரு நாள் பயணமாக எங்காவது வெளியே சென்றுவிட்டு வரலாம் என்று நினைத்தால் நிச்சயமாக இந்தக் இடத்திற்கு வரலாம்‌ அதுதான் ஓடப்பள்ளி தடுப்பணை மற்றும் பூங்கா. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி தடுப்பணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 1212

    Namakkal | நாமக்கலுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா.? இந்த இடத்திற்கு கண்டிப்பாக போங்க...

    இந்த பூங்கா கடந்த 2012 ஆண்டு ரூபாய் 89 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பின் மக்கள் வர்த்து அதிகமானதால் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. ஏனென்றால் ஆற்றுக்குளியல், சுடச்சுட மீன் வறுவல், நிம்மதியாக ஓய்வெடுக்க பூங்கா என பல விசயங்கள் இங்கு உள்ளது. நிச்சயமாக ஒருநாள் பயணமாக வருபவர்களுக்கு உகந்ததாக இடமாக ஓடப்பள்ளி தடுப்பணை மற்றும் பூங்கா அமையும். செய்தியாளர்: மதன், நாமக்கல்.

    MORE
    GALLERIES