முகப்பு » புகைப்பட செய்தி » நாமக்கல் » கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

Kollimalai Wooden House | நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், ஆங்கிலேயரான ஜெசிமென் பிராண்டால் கட்டப்பட்ட மர பங்களா இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கொல்லிமலை செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தையும் பார்க்க தவறாதீங்க.

  • 111

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    மாவட்டம் கொல்லிமலையில், ஆங்கிலேயர் காலத்தில் ஜெசிமென் பிராண்டு மற்றும் அவரது துணைவியாரான ஈவ்லின் பிராண்டு ஆகியோர் மலைவாழ்மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மர பங்களா அமைத்து மருத்துவ சேவை உள்ளிட்ட பல்வேறு நற்செயல்களை செய்தனர். அந்த மரவீடு இப்போதும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 211

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலைக்கு அருகில் உள்ள சேந்தமங்கலத்திற்கு 1909ஆம் ஆண்டு மருத்துவ பயிற்சி பெற்ற ஜெசிமென் பிராண்டு என்ற ஆங்கிலேர் தனது 24ஆம் வயதில் வந்தார். அங்கே ஒரு சிறிய மருத்துவமனையை அமைத்தார். அங்கு நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்யத் தொடங்கினார்.

    MORE
    GALLERIES

  • 311

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    அந்த நாட்களில் கொள்ளை நோயான காலரா மற்றும் ப்ளேக்கால் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் உயிழந்தனர். அபோது அவர்களுக்கு ஜெசிமென் பிராண்டு மருத்துவ உதவிகள் புரிந்து காப்பாற்றினார்.

    MORE
    GALLERIES

  • 411

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    அப்போது கொல்லிமலையில் வசிக்கும் மக்கள், தங்கள் காட்டு பகுதியில் விளையும் பழங்களை விற்பனை செய்வதற்கா மலைப்பாதையின் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து சேந்தமங்கலம் பகுதிக்கு வருவார்கள். அவர்களுக்கும் மருத்தவ உதவிகளை செய்யவேண்டும் என்று ஜெசிமென் விரும்பினார்.

    MORE
    GALLERIES

  • 511

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    1912ஆம் ஆண்டு ஜெசிமென் மற்றும் அவரது நண்பர் மார்லிங் என்பவருடன் கொல்லிமலையில் உள்ள வாழவந்தி என்ற இடத்திற்கு மலை மீது நடந்து சென்றார்கள். அங்கிருந்து ஓலைக்குடிசையில் தங்கி, மலை கிராமங் மக்களுக்கு சிகிச்சை அளித்தார். அங்கே ஒரு மர பங்களாவையும் கட்டத் தொடங்கினார்.

    MORE
    GALLERIES

  • 611

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    இந்நிலையில், 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேந்தமங்கலத்தில் ஜெசிமென் பிராண்டுக்கும் ஈவ்லின் என்பருக்கும்க்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர், அத்ந தம்பதியினர் கொல்லிமலைக்கு வந்தனர். அவர்கள் வாழவந்தியில் உள்ள மரத்தால் ஆன வீட்டில் குடியேறினர்.

    MORE
    GALLERIES

  • 711

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    1919ஆம் ஆண்டு, கொல்லிமலை பகுதகளில் விஷக்காய்ச்சல் பரவியது. விஷக்காய்ச்சளால் பாதிக்கப்பட்ட மக்களை மலைமேலுள்ள பாறையில் போட்டு வந்து விடுவார்களாம். நோய் நீங்கி உயிரோடு இருந்தால் மீண்டும் அவர்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படுவார்களாம். அதனாலேயே அந்த பகுதி சீக்கு பாறை (SICK MOUNT) என்று இன்றளவும் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நோயால் பாதிக்கட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து ஜெசிமென் காப்பாற்றினார்.

    MORE
    GALLERIES

  • 811

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    அத்தோடு மட்டும் நில்லாமல், கொல்லிமலை பகுதியில் நடந்த குழந்தை திருமண முறைக்கு எதிராகவும் போடினார். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட, சிறுமிகளையும் ஜெசிமென்-ஈவ்லி தம்பதியினர் பாதுகாத்து வளர்த்தனர். அவ்வாறு பாதிப்புக்கு உள்ளான சிறுமிகளுக்கும், நோய்பாதித்த குழந்தைகளுக்கும் சிகிச்சை அளித்து விடுதியி அமைத்து பராமரித்தனர்.

    MORE
    GALLERIES

  • 911

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    கொல்லிமலையில் ஜெசிமென் பள்ளிகளையும் கட்டினார். சிறுவர்களுக்கு கல்வி அறிவும், தோட்டக்கலை, பாய் முடைதல், நெசவு, பட்டுபூச்சி வளர்ப்பு, தச்சு போன்றவைகளும் கற்றுதரபட்டன. அப்பகுதி மக்களின் விவசாய முன்னேற்றத்திற்கும் துணைபுரிந்தார். கொல்லிமலையின் பல பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தவும் துணைபுரிந்தார்.

    MORE
    GALLERIES

  • 1011

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    இந்நிலையில் ஜெசிமென் பிராண்டு கறுப்பு நீர் காய்ச்சல் (Black Water Fever) என்னும் வினோத நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனின்றி, 1929ஆம் ஆண்டு தனது 44ஆவது வயதில் கொல்லிமலையிலேயே உயிரிழந்தார். 17 ஆண்டுகள் கொல்லிமலையிலேய வாழ்ந்த அவரின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 1111

    கொல்லிமலையில் உள்ள சிறப்புமிக்க மர பங்களாவுக்கு போயிருக்கீங்களா... இதற்கு இப்படி ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறதா!?

    ஜெசிமென் பிராண்டு வாழந்த மரத்தால் ஆன பங்களாவை இன்றும் பார்க்கலாம். அங்கே அவர்கள் பயன்படுத்திய கட்டில், சமையலறை மற்றும் பிற பொருட்களையும் பார்க்க முடியும். கொல்லிமலை மக்களின் முன்னேற்றத்திற்கு உதவிய ஜெசிமென் பிராண்டுடின் நினைவுகளை சொல்லும் பல்வேறு அடையாளங்கள் இன்றும் இருக்கின்றன. அந்த வகையில் மர பங்களாவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    MORE
    GALLERIES