முகப்பு » புகைப்பட செய்தி » நாகப்பட்டினம் » எட்டுக்குடி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.. படையெடுத்த பக்தர்கள்

எட்டுக்குடி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.. படையெடுத்த பக்தர்கள்

Ettukudi Murugan Temple : நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. 

  • 16

    எட்டுக்குடி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.. படையெடுத்த பக்தர்கள்

    மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி இன்று  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 26

    எட்டுக்குடி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.. படையெடுத்த பக்தர்கள்

    முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் இக்கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் தைப்பூச வழிபாடு சிறப்பு பெற்ற ஒன்றாகும்.

    MORE
    GALLERIES

  • 36

    எட்டுக்குடி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.. படையெடுத்த பக்தர்கள்

    தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமான் பரிசட்டத்தில்  எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அஸ்திரத் தேவருக்கு சரவணப்பொய்கையில் சிறப்பு வழிபாடுகள், தீா்த்தவாரி நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 46

    எட்டுக்குடி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.. படையெடுத்த பக்தர்கள்

    பின்னர், முருகப் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் விபூதிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 56

    எட்டுக்குடி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.. படையெடுத்த பக்தர்கள்

    தைப்பூசத்தை முன்னிட்டு காலை முதலே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 66

    எட்டுக்குடி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.. படையெடுத்த பக்தர்கள்

    மேலும் தைப்பூசம் மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் எட்டுக்குடி - திருக்குவளை பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்தபடியே‌ சென்று வருகின்றன‌.

    MORE
    GALLERIES