முகப்பு » புகைப்பட செய்தி » மயிலாடுதுறை » மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

Mayiladuthurai District | மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவில் வேறெங்கும் இல்லாத பல தனிச்சிறப்புகளை கொண்டுள்ள திவ்ய தேச கோவிலாகும்.

  • Local18
  • 19

    மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

    மாவட்டத்தில் உள்ள திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவில் திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 39ஆவது கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலில் ராமன் யாககுண்டத்தில் இருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல தேவியருடன் காட்சியளிப்பது தனிச்சிறப்பு.

    MORE
    GALLERIES

  • 29

    மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

    சீர்காழியில் இலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்திருகிறது இந்த, அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில்.

    MORE
    GALLERIES

  • 39

    மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

    கோவிலின் கருவறையில் மூலவர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் கையில் ஆயிதத்துடன் காட்சியளிக்கிறார். இந்த கோவில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலமாகும். திருமால் ஒரே இடத்தில் ராமராகவும், கிருஷ்ணராகவும் காட்சி தரும் ஒரே தலம் இதுதான் என்று சொல்லப்படுகிறது. ராமர் சங்கு-சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 49

    மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

    தாகமாக இருந்த அர்ஜுனன் தனது தாகத்தை தீர்க்க அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி கிருஷ்ணரை அழைத்து, அவர் கூறியபட நிலத்தை கீறிய அர்ஜுனன், அங்கே கங்கையை வரவழைத்து தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார் என்கிறது தலவரலாறு.

    MORE
    GALLERIES

  • 59

    மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

    பின்னர், அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, கிருஷ்ணர் (பார்த்தசாரதி) இங்கேயே கோவில் கொண்டதாகக் சொல்லப்படுகிறது. பார்த்தனான அர்ஜூனனுக்கு உண்டான கோவில் என்பதால் இந்த இடம் பார்த்தன் பள்ளி என்று போற்றப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 69

    மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

    கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசத்தை தொடங்கிய இடம் இது என்று சொல்லப்படுகிறது. எனவே, இந்த தலத்திற்கு திருப்பார்த்தன் பள்ளி என்ற பெயர் வந்ததாகவும் மற்றொரு கருத்து நிலவுகிறது. இந்த தலத்தில் அர்ஜூனனுக்கும் தனி சந்நிதி இருக்கிறது. இங்கே, அர்ஜூனன் கையில் வாளுடன் காட்சி தருகிறார்.

    MORE
    GALLERIES

  • 79

    மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

    அகத்தியர், பரத்வாஜர், கெளதமர், வருணன் உள்ளிட்ட பலரும் இந்த தலத்தில் திருமாலை வணங்கியதாகவும், சிவபெருமான் ஏகாதச ருத்ரன் வடிவில் இந்த தலத்தில் திருமாலை வழிபட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 89

    மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

    தாயார் செண்பகவல்லி அர்ஜூனரை பார்த்த வண்ணம் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீலா தேவி மற்றும் ஜாம்பவதி என நான்கு தேவியர்களுடன் திருமால் திருவிழா காலங்களில் வீதி உலா வந்து அருள்பாளிப்பார்.

    MORE
    GALLERIES

  • 99

    மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

    குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடுகின்றனர். அவர்களின் பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து துளசிமாலை சாற்றி வழிபட்டு செல்கின்றனர்.

    MORE
    GALLERIES