முகப்பு » புகைப்பட செய்தி » மதுரை » பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

Madurai Chithirai Thiruvizha | மதுரை சித்திரை திருவிழா உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 23ம் தேதி தொடங்கி மே மாதம் 8ம் தேதி வரையில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

  • 18

    பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

    உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடப்பது வழக்கம். எனினும், சித்திரை திருவிழா சுற்றுப்பகுதி மக்கள் ஒன்று கூடி கொண்டாடி மகிழும் முக்கிய விழாவாகும்.

    MORE
    GALLERIES

  • 28

    பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

    இதேபோல மதுரையில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா, ஆடி பிரம்மோற்சவம், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். சித்ரா பௌர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவர்.

    MORE
    GALLERIES

  • 38

    பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

    இந்த ஆண்டு (2023) மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி மே மாதம் 8ஆம் தேதி வரையில் வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவுக்கு மதுரை மக்களும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் தயாராகி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 48

    பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

    மொத்தம் 16 நாட்கள் நடடைபெறவுள்ள இந்த விழாவின், முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 1ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயம் நடைபெறவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

    மே 2ஆம் தேதி, சிவபெருமான் மீனாட்சியை போரில் வென்று மணம் புரிந்த திருவிளையாடல் புராண நிகழ்வான, புகழ்பெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா நடைபெறவுள்ளது. இதை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பர்.

    MORE
    GALLERIES

  • 68

    பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

    அதனைத் தொடர்ந்து, மே மாதம் 3ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறும். அப்போது நான்கு மாசி வீதிகளை ஆடி அசைந்து வரும் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி ஆகியோரின் தேர்களை பக்தர்களை பக்தியுடன் பார்த்து பரவசம் அடைவார்கள்.

    MORE
    GALLERIES

  • 78

    பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

    மே 4ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர், விண்ணதிரும் அதிர்வேட்டுகள் முழுங்க, மலையிலிருந்து பல்லாக்கில் புறப்பட்டு வருவார். மதுரைக்குள் வரும் அழகரை மூன்று மாவடி அருகே சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து பல்லாயிரக் கணக்கான மக்கள் எதிர்சேவை செய்வார்கள். அப்போது, கள்ளழகர் போல வேடமிட்டு வரும் பக்தர்கள் நீரை பீய்ச்சியடித்து உற்சாகத்தில் திளைப்பார்கள்.

    MORE
    GALLERIES

  • 88

    பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

    தொடர்ந்து, மே 5ஆம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் சித்திரை திருவழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைவபம் நடைபெறவுள்ளது. பக்தர் “கூட்டத்தில் எள்தூவினால் கூட கீழே விழாது” என்று மக்கள் கூறும் வழக்கைப்போல நெருக்கமாய் கூடி நின்று பக்தி பரவத்துடன் அழகரை தரிசித்து மகிழ்வார்கள்.

    MORE
    GALLERIES