இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30ம் தேதிகள் மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகள் மற்றும் ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 9:20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுநாள் இந்த ரயில் சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம், கிளக்கடையும், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்லும்” என தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.