முகப்பு » புகைப்பட செய்தி » மதுரை » மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி - செல்லப்பிராணிகளுடன் குவிந்த உரிமையாளர்கள்!

மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி - செல்லப்பிராணிகளுடன் குவிந்த உரிமையாளர்கள்!

கண்காட்சியில் பங்கேற்ற சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி, ராஜபாளையம், கட்டக்கால் உள்ளிட்ட பல்வேறு நாட்டின நாய்களுக்கு 'குட்டி இளம் பருவம்' மற்றும் 'வளர்ந்த நாய்கள்' எனும் பிரிவுகளில் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

  • 16

    மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி - செல்லப்பிராணிகளுடன் குவிந்த உரிமையாளர்கள்!

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி சார்பில் "தேசிய அளவிலான நாட்டின நாய்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்" ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

    MORE
    GALLERIES

  • 26

    மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி - செல்லப்பிராணிகளுடன் குவிந்த உரிமையாளர்கள்!

    இந்தியாவிலேயே முதன்முறையாக நாட்டின் நாய்களுக்காக நடைபெற்ற பிரத்யேக கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் தங்கள் நாய்களுடன்  உற்சாகமாக பங்கேற்றனர்.

    MORE
    GALLERIES

  • 36

    மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி - செல்லப்பிராணிகளுடன் குவிந்த உரிமையாளர்கள்!

    இந்த கண்காட்சியில் திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சை, காரைக்குடி உள்பட தமிழகம் முழுவதுதிலும் இருந்து 270 நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 46

    மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி - செல்லப்பிராணிகளுடன் குவிந்த உரிமையாளர்கள்!

    கண்காட்சியில் பங்கேற்ற சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி, ராஜபாளையம், கட்டக்கால் உள்ளிட்ட பல்வேறு நாட்டின நாய்களுக்கு 'குட்டி இளம் பருவம்' மற்றும் 'வளர்ந்த நாய்கள்' எனும் பிரிவுகளில் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 56

    மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி - செல்லப்பிராணிகளுடன் குவிந்த உரிமையாளர்கள்!

    போட்டியில் கலந்துகொண்ட அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பைகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நாய்களுக்கு பரிசு கேடயங்களும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 66

    மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி - செல்லப்பிராணிகளுடன் குவிந்த உரிமையாளர்கள்!

    போட்டியில் பங்கேற்ற நாய்களின் உரிமையாளர்கள் கூறுகையில், அயல்நாட்டு நாய்களை போல அல்லாமல் பராமரிப்பு குறைவும், கவனிப்புணர்வும், விளையாட்டு உணர்வும் மிகுந்த நாட்டின நாய்களை மீட்டெடுத்து வளர்ப்பதில் அனைவரும் ஆர்வம் செலுத்த வேண்டும் என கூறினர்.

    MORE
    GALLERIES