முகப்பு » புகைப்பட செய்தி » சித்திரை திருவிழா : தங்கக்குதிரையில் கள்ளழகர்.. மக்கள் வெள்ளத்தில் வைகை.. விண்ணதிர்ந்த கோவிந்தா முழக்கம்..!

சித்திரை திருவிழா : தங்கக்குதிரையில் கள்ளழகர்.. மக்கள் வெள்ளத்தில் வைகை.. விண்ணதிர்ந்த கோவிந்தா முழக்கம்..!

சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், மேளதாளத்துடன் வைகை ஆற்றங்கரை நோக்கி சென்ற கள்ளழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

  • 17

    சித்திரை திருவிழா : தங்கக்குதிரையில் கள்ளழகர்.. மக்கள் வெள்ளத்தில் வைகை.. விண்ணதிர்ந்த கோவிந்தா முழக்கம்..!

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் பச்சைப்பட்டு அணிந்து பக்தர்களின் கோவிந்தா முழக்கம் விண்ணதிர வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

    MORE
    GALLERIES

  • 27

    சித்திரை திருவிழா : தங்கக்குதிரையில் கள்ளழகர்.. மக்கள் வெள்ளத்தில் வைகை.. விண்ணதிர்ந்த கோவிந்தா முழக்கம்..!

    உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி - சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், அழகர் மலையில் இருந்து வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் நேற்று எதிர்சேவை நடைபெற்றது. இரவு விடிய விடிய கள்ளழகர் வரும் வழி நெடுகிலும் அழகர் மற்றும் கருப்பணசாமி வேடத்தில் ஆடியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் பக்தர்கள் வழிபட்டனர்.

    MORE
    GALLERIES

  • 37

    சித்திரை திருவிழா : தங்கக்குதிரையில் கள்ளழகர்.. மக்கள் வெள்ளத்தில் வைகை.. விண்ணதிர்ந்த கோவிந்தா முழக்கம்..!

    தொடர்ந்து இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது. கள்ளழகர் நாடு செழிக்கும் என்பதை குறிக்கும் வகையில் பச்சைப்பட்டு அணிந்து திருக்கோயிலில் இருந்து வைகைக் கரை நோக்கி இன்று அதிகாலை புறப்பட்டார்

    MORE
    GALLERIES

  • 47

    சித்திரை திருவிழா : தங்கக்குதிரையில் கள்ளழகர்.. மக்கள் வெள்ளத்தில் வைகை.. விண்ணதிர்ந்த கோவிந்தா முழக்கம்..!

    சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், மேளதாளத்துடன் வைகை ஆற்றங்கரை நோக்கி சென்ற கள்ளழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

    MORE
    GALLERIES

  • 57

    சித்திரை திருவிழா : தங்கக்குதிரையில் கள்ளழகர்.. மக்கள் வெள்ளத்தில் வைகை.. விண்ணதிர்ந்த கோவிந்தா முழக்கம்..!

    அதன்பின் திருக்கண்களால் அருள்பாலித்தபடியே ஆழ்வார்புரம் வைகை ஆற்றை நோக்கி சென்றார். கள்ளழகரை வரவேற்பதற்காக வெள்ளிக்குதிரை வாகனத்தில் அதிகாலை 5.15 மணிக்கு மண்டகப்படியில் வீரராகவ பெருமாள் எழுந்தருளினார். அப்போது, ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவனி வந்தார். மண்டகப்படியில் இருந்து ஆற்று முகத்துவாரத்திற்கு கள்ளழகர் வந்ததும் வீரராகவப் பெருமாள் மூன்று முறை முன்னும் பின்னும் சென்று அவரை வரவேற்றார்.

    MORE
    GALLERIES

  • 67

    சித்திரை திருவிழா : தங்கக்குதிரையில் கள்ளழகர்.. மக்கள் வெள்ளத்தில் வைகை.. விண்ணதிர்ந்த கோவிந்தா முழக்கம்..!

    அதைத்தொடர்ந்து காலை 5.50 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது, கோவிந்தா முழக்கம் விண்ணதிர லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    MORE
    GALLERIES

  • 77

    சித்திரை திருவிழா : தங்கக்குதிரையில் கள்ளழகர்.. மக்கள் வெள்ளத்தில் வைகை.. விண்ணதிர்ந்த கோவிந்தா முழக்கம்..!

    மேலும் வைகைக் கறையில் கூடியிருந்த பக்தர்கள் சூடம் ஏற்றியும் அழகரை வழிபட்டனர்.தொடர்ந்து வீரராகவப் பெருமாள் வீற்றிருந்த மண்டகப்படியை மூன்று முறை கள்ளழகர் வலம் வந்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர், மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

    MORE
    GALLERIES