தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..
Madurai | தொடர் மழையின் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மதுரை சிம்மக்கல் கல் பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்: வெற்றி, மதுரை
வைகை ஆறு மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 66 அடியை எட்டியுள்ளது.
2/ 5
இதனையடுத்து வைகை கரையோர மக்களுக்கு முதலாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3/ 5
சாத்தையாறு அணை பகுதிகளில் மற்றும் தேனி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் வைகை ஆற்றில் தற்போது 2000 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது.
4/ 5
மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் மூழ்கிய நிலையில் இரு கரையும் தொட்டு தண்ணீர் ஓடுவதால் ஆற்றுக்குள் மக்கள் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
5/ 5
மதுரை சிம்மக்கல் பாலத்தில் நிரம்பி இருக்கும் தண்ணீர்
15
தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..
வைகை ஆறு மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 66 அடியை எட்டியுள்ளது.