முகப்பு » புகைப்பட செய்தி » மதுரை » மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

Madurai Tourist spot | மதுரை மாவட்டத்தில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற பல்வேறு இடங்கள் இருக்கின்றன. இந்த இடம் சற்றே மாறுபட்டு வரலாற்று சின்னங்களும், பசுமையும், பறவைகளும் நிறைந்த பல்வேறு உயிரினங்கள் வாழும் பாரம்பரிய இடமாகும்.

  • 111

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    மாவட்டத்தில் புகழ்மிக்க கோவில்களும், பல்வேறு விதமான சுற்றுலா தலங்களும் இருக்கின்றன. இங்கே உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் ஆன்மிகத்துடன் கூடிய முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது மதுரை.

    MORE
    GALLERIES

  • 211

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    மதுரை மாவட்டத்தில், மதுரைக்கு வடக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அரிட்டாபட்டி. இங்கிருக்கும் மலையை ‘திருப்பிணையன் மலை’ என்று சமணக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இங்கே சமணர் காலக் குகைகள், பாண்டியர் காலக் குடைவரை கோவில்கள், குளம், அரிய வகை பறவைகள், பழமையான மலை என அற்புதமான இடமாகும்.

    MORE
    GALLERIES

  • 311

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த பகுதி மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக திகழ்கிறது.

    MORE
    GALLERIES

  • 411

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    இந்த அரிட்டாபட்டி கிராமத்தை சுற்றி ஏழு மலைகள் இருக்கின்றன. ஆதாலால், இயற்கை எழில் கொஞ்சுது. அரிய வகை பறவைகளை இங்கே ஏராளமாக பார்க்க முடியும். உள்நாட்டு பறவைகள் மட்டும் அல்லாது வெளிநாட்டு பறவைகளையும் இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 511

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    இந்த பகுதியில், வாழை தோப்புகளும், கரும்பும், காய்கறி தோட்டங்களும், பூந்தோட்டங்களும், வயல்வெளிகளும் என பசுமை போர்த்திய விவசாயம் நிலங்களையும் பார்க்கலாம். இந்த பச்சை பசேலென்றிருக்கும் பசுமையை மலை உச்சில இருந்து பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 611

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    இங்கிருக்கும் குன்றுகளில் சமணர்கால குகைகள், சமணப்படுகைகள், மகா வீரர் புடைப்புச் சிற்பம் என பல வரலாற்று சின்னங்களைப் பார்க்கலாம். இதேபோல இன்றும் மக்கள் பக்தியோடு வணங்கும் சில கோவில்களையும் பார்க்க முடியும். பண்டை தமிழர்களின் வாழவியல் வளச்சிப் போக்கின் ஆதாரங்ளையும் காணமுடியும் அந்த வகையில் இந்த பகுதி மதுரையில் பலராலும் அறியப்படதா முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 711

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    இதேபோல இங்கே, பல்லவ மன்னர்களின் அற்புத படைப்பான குடைவரைக் கோவில்களை பார்க்க முடியும். இந்த குடைவரை கோவல்கள் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகின்றன. அந்த வகையில் இந்த பகுதி ஓர் வரலாற்று சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது. வாழும் மூதூர் என்று போற்றப்படும் மதுரைக்கு இதுவும் பெருமை சேர்க்கும் பகுதியாக இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 811

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    இந்த அரிட்டாபட்டியில் அழகே உருவாய், தாமரை மலர்கள் நிறைந்த குளம் ஒன்று இருக்கிறது. இதற்கு தர்மகுளம் என்று பெயர். இந்த குளத்தை பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அந்த வகையில், இது சுற்றுலா தலம் மட்டும் அல்லாமல் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாகவும் இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 911

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    திருமணமான தம்பதிகள், திருமணம் நடந்த மறுநாள் இந்த குளத்ல் இருந்து தண்ணீரை எடுத்து வந்து சமைத்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

    MORE
    GALLERIES

  • 1011

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    தர்மகுளம் மட்டும அல்லாமல், இந்த அரிட்டாபட்டி மலையில் நூற்றுக்கணக்கான சுனைகள் இருப்பதைப் பார்க்கமுடியும். இதனால் இங்கே பறவைகளும், மான்களும், முயல்களும், பல சிறய விலங்களும் வந்து தாகம் தீர தண்ணீர் குடித்து செல்கின்றன.

    MORE
    GALLERIES

  • 1111

    மதுரையில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்... இயற்கை, அரிய பறவைகள் வரலாற்று சின்னங்களுடன் பயணிக்கலாம்!

    இந்த பகுதியல் பூட்டட் ஈகிள், பிரவுன் பிஸ் ஈகில், தேன் பருந்து மற்றும் பல அரியவகை பறவைகள், வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் போன்ற ஏராளமான பறவைகளையும், அவை எழுப்பும் இனிமையான பலவித குரல்களையும் கண்டுகளித்து கேட்டு ரசிக்க முடியும். இந்த பகுதி மதுரையில் ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சிறந்த இடமாகும்.

    MORE
    GALLERIES