முகப்பு » புகைப்பட செய்தி » Breaking and Live Updates » வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

எம்ஜிஆருக்குப் பிறகு பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க கமல் முயன்றார். பல வருடங்களாக அது குறித்து பேசிக் கொண்டிருந்தவர் 1989 இல் தனது திட்டங்களை வெளிப்படையாக வாரப்பத்திரிகை ஒன்றில் முன் வைத்தார்.

  • News18
  • 111

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    மறைந்த எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகிறது. இந்த கதையை படமாக்க எம்ஜிஆர் முயற்சி எடுத்து, படப்பிடிப்புக்கு முந்தைய கதாபாத்திரப் போஸ்டர்களை வெளியிட்டார். என்ன காரணமோ அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.

    MORE
    GALLERIES

  • 211

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    எம்ஜிஆருக்குப் பிறகு பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க கமல் முயன்றார். பல வருடங்களாக அது குறித்து பேசிக் கொண்டிருந்தவர் 1989 இல் தனது திட்டங்களை வெளிப்படையாக வாரப்பத்திரிகை ஒன்றில் முன் வைத்தார்.

    MORE
    GALLERIES

  • 311

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    மொகல் - லே - ஆசம் போன்ற இந்தி வரலாற்றுப் படங்களை ரசித்த கமலுக்கு அதுபோல் தமிழில் ஒரு வரலாற்றுப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரைப் பொறுத்தவரை தமிழில் கடைசியாக வெளிவந்த நல்ல சரித்திரப் படம் என்றால் வீரபாண்டிய கட்டப்பொம்மன்.

    MORE
    GALLERIES

  • 411

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    அதற்குப் பிறகுதானே எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் வந்தது, அது சரித்திரப் படமில்லையா என எம்ஜிஆர் ரசிகர்கள் கேட்கலாம். அந்தப் படத்தில் பாண்டியனைவிட துலக்கமாக எம்ஜிஆர்தான் தெரிந்தார் என அதற்கும் கமல் பதிலளித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 511

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    தமிழில் ஒரு தரமான சரித்திரப் படம் என்ற எண்ணம் தோன்றியதை மணிரத்னம், பி.சி.ஸ்ரீராமுடன் கமல் விவாதித்திருக்கிறார். பிறகு அவரே பொன்னியின் செல்வனை பரிந்துரைத்துள்ளார். படத்துக்காக தொல்லியல்துறை சார்ந்தவர்களுடன் உரையாடவும் செய்துள்ளார். நாவலில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் வரும். அவற்றை தவறவிடக் கூடாது, அதேநேரம் திருவிழா கூட்டமாகவும் படம் ஆகிவிடக்கூடாது என்று அதையும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராமுடன் விவாதித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 611

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    அன்று போல் அனைத்துக் காட்சிகளையும் அரங்கு அமைத்து எடுக்க கமலுக்கு உடன்பாடில்லை. கதை எங்கு நடப்பதாக சொல்லப்படுகிறதோ, அந்தப் பகுதிகளுக்கேச் சென்று, தேவைப்பட்டால் அரங்கு அமைப்பது என்று முடிவு செய்துள்ளார். நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களுக்கு புதுமுக நடிகைகளை நடிக்க வைப்பது கமலின் தீர்மானமாக இருந்தது. தெரிந்த நடிகை என்றால் அவர்களின் இமேறா அந்த கதாபாத்திரத்தில் படியும், அது நல்லதில்லை என்பது அவரது கருத்து. அதேநேரம் ஆண் கதாபாத்திரங்களில் நடிக்க சத்யராஜ், பிரபு போன்றவர்களிடம் பேசி அவர்களின் சம்மதத்தைப் பெற்றிருந்தார். இசை, வேறு யார் இளையராஜாதான்.

    MORE
    GALLERIES

  • 711

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    வந்தியத்தேவனாக கமல் நடிப்பதும் உறுதியாகியிருந்தது. மணிரத்னமே பொன்னியின் செல்வனை இயக்க சரியான ஆள் என்பதிலும் கமல் தீர்க்கமாக இருந்தார். படத்தின் திரைக்கதை எழுதும் வேலையும் ஜரூராக நடந்தது. முழு ஸ்கிரிப்ட் தயாரானதும் அதனை பொன்னியின் செல்வனின் தீவிர வாசகர்கள் சிலரிடம் வாசிக்கத் தந்து கருத்து கேட்க கமல் தீர்மானித்திருந்தார். ஆனால், அது போல் எதுவும் நடக்கவில்லை. படமும் டேக்ஆஃப் ஆகவில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது பட்ஜெட்.

    MORE
    GALLERIES

  • 811

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    பொன்னியின் செல்வனை எந்த சமரசமும் இல்லாமல் படமாக்க 1989 காலகட்டத்தில் 2 கோடிகள் தேவைப்பட்டன. இன்னொருவர் தயாரிப்பதைவிட தானே படத்தை தயாரித்தால்; நினைத்தபடி முடிக்க முடியும் என கமல் நம்பினார்.

    MORE
    GALLERIES

  • 911

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    படப்பிடிப்பில் ஏதாவது குளறுபடி நடந்தாலும்  2 கோடி என்ற பட்ஜெட் 4 கோடியாகிவிடும். இதுபோன்ற சிக்கல்கள் இருந்ததால் பொன்னியின் செல்வன் தொடங்கப்படவில்லை.

    MORE
    GALLERIES

  • 1011

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    சுமார் 33 வருடங்கள் கழித்து மணிரத்னம் பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக திரைப்படமாக்கியிருக்கிறார். இன்று அதன் ட்ரெய்லர் வெளியாகிறது. அதற்கு கமல் வாய்ஸ் ஓவர் தந்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 1111

    வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

    நாவலின் நாயகன் வந்தியத்தேவனாக நடிக்க விரும்பிய கமல், அப்படத்தின் வாய்ஸ் ஓவரை மட்டுமே தர முடிந்திருக்கிறது. மருதநாயகம் போல கமலின் நிறைவேறாத கனவாகிப் போனது பொன்னியின் செல்வன்.

    MORE
    GALLERIES