முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

மாண்டியா, குடகு மைசூரு, சாமராஜநகர் மாவட்டங்களில் 11 இடங்கள் உட்பட மாநிலத்தில் 53 நினைவுச்சின்னங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது.

  • 113

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    "ஸ்மாரக மித்ரஸ்"(Smaraka Mithras) எனும் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசின் தொல்லியல், அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரியத் துறை, கர்நாடக சுற்றுலாத் துறையுடன் இணைந்து மைசூரு, மாண்டியா, சாமராஜநகர் மற்றும் குடகு மாவட்டங்களில் உள்ள பதினொரு நினைவுச் சின்னங்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 213

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பெருநிறுவன சமூகப் பொறுப்பின்(CSR) கீழ் சுற்றுலா வசதிகளின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான நினைவுச்சின்னங்களைத் தத்தெடுக்க ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.தத்தெடுப்பு திட்டத்தின் விவரங்கள் https://archaeology.karnataka.gov.in இல் கிடைக்கின்றன

    MORE
    GALLERIES

  • 313

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    முதற்கட்டமாக வெளியிடப்பட்ட மாண்டியா மாவட்டத்தில் 7 இடங்கள், குடகு மாவதில் 2 இடங்கள், மைசூரு, சாமராஜநகர் மாவட்டங்களில் தலா ஒரு இடம் உட்பட மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 53 நினைவுச்சின்னங்களின் பட்டியலை இத்துறை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளை கர்நாடக அரசின் https://www.eproc.karnataka.gov.in தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 413

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    DAMH இன் கூற்றுப்படி, சுற்றுலாவை மேம்படுத்துவதிலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலும் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் நினைவுச்சின்னங்களின் செழுமையான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், உரிய அங்கீகாரத்தை அளிக்கும் வகையில் ‘உள்ளடங்கிய சுற்றுலா அனுபவ’த்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 513

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை 1454 இல் திம்மண்ணா நாயக்கரால் கட்டப்பட்டது. அதன் பின்னர் பல அரசர்கள் கைகளுக்கு மாறி திப்பு சுல்தான் கைகளுக்கு வந்தது. அவரிடம் இருந்து பிரெஞ்சு அரசு இந்த கோட்டையை கைப்பற்றியது. அன்றைய கால மைசூர் ஆட்சியின் தலைமை இடமாக இந்த கோட்டை திகழ்ந்தது.

    MORE
    GALLERIES

  • 613

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    ஸ்ரீரங்கப்பட்டன கோட்டை அதன் அகழியும் தத்தெடுப்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளது. காவேரி கரையில் அமைந்துள்ள இந்த அகழியில் இன்று பாதிக்கும் மேல் கட்டிட இடிபாட்டு குப்பைகள் மற்றும் இறைச்சி குப்பைகளை கொட்டும் இடமாக மாறிவிட்டது. அதை மீட்டெடுக்கவே இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 713

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    1098 இல் ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்தனனால் கட்டப்பட்ட. ராயகோபுரமானது விஜயநகரப் பேரரசின் போது கட்டப்பட்ட ஒரு புகழ்பெற்ற முழுமையற்ற கோயிலாகும். இந்த கோவிலில் சிக்கலான வேலைப்பாடுகளுடன் கூடிய 4 தூண்கள் உள்ளன ஆனால் கோபுரம் இல்லை. இது ஒரே இரவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 813

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    பண்டைய இந்தியாவில், கோயில்கள் பொதுவாக நீர் ஆதாரத்திற்கு அருகில் கட்டப்பட்டன அல்லது அவற்றை ஒட்டி தொட்டிகள் இருக்கும். கல்யாணி குளம், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுகோட்டில் உள்ளது.இந்த பழமையான கோயில் குளம் 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் மாவட்டத்தில் உள்ள 108 கோயில் குளங்களில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 913

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    மேலுக்கோட்டை புவனேஸ்வரி மண்டபம், பழமையான கல்யாணி குளத்தை ஒட்டியுள்ள எண்கோண மண்டபம் அல்லது கியோஸ்க் செதுக்கப்பட்ட கல் தூண்கள் கொண்ட மண்டபம் ஆகும்.. தொல்யியல் துறை பாதுகாக்கப்பட்ட மரபுச் சின்னமாக இதை அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 1013

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    மேலுக்கோட்டை செலுவநாராயண சுவாமி கோயிலுக்கும் ராய கோபுரத்துக்கும் இடையே அக்கா-தங்கியரா குளம் உள்ளது. சில நூற்றண்டிருக்கு முன்னர் கட்டப்பட்டதாக சொல்லும் இந்த குளம் சகோதரிகள் குளம் என்று குறிப்பிடப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 1113

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    ராஜாவின் சமாதி என்று அழைக்கப்படும் கத்திகே(Gaddige) கர்நாடகாவின் அழகிய மலைவாசஸ்தலங்களில் ஒன்றான மடிகேரியில் அமைந்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் அன்றைய இந்தோ-சார்செனிக் கட்டிட பாணியை சித்தரிக்கிறது. கொடவர்கள்(kodavas) அரச வம்சத்தினருக்காக மூன்று கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த மூன்றில் மிகப்பெரிய மத்திய கல்லறை, கொடவ மன்னர் தொட்டவீரராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி மகாதேவியம்மாவின் கல்லறையாகும்.

    MORE
    GALLERIES

  • 1213

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    நல்நாத் அரண்மனை என்பது 1792 ஆம் ஆண்டு மன்னர் தொட்டா வீரராஜேந்திரனால் கட்டப்பட்ட அரண்மனை ஆகும். இது மடிகேரியில் இருந்து 35 கிமீ தொலைவில் காக்கபே அருகே உள்ள யேவகபாடி கிராமத்தில் அமைந்துள்ளது. திப்பு சுல்தானிடம் இருந்து தப்பிய முதலாம் லிங்கராஜாவின் மகன் தொட்டா வீரராஜேந்திரன். குடகின் அரசனாக முடி சூடி திப்பு தலைநகருக்கு அருகில் இதை காட்டினார்.

    MORE
    GALLERIES

  • 1313

    கர்நாடகாவில் உள்ள இந்த இடங்களை தத்தெடுத்து பராமரிக்க வாய்ப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

    இந்த பட்டியலில் கே.ஆர்.பேட் தாலுக்காவில் உள்ள, தேக்கினகட்டா சிவன் கோவிலும் பாண்டவபுரா தாலுக்காவில் உள்ள ராகுவில் உள்ள கோதண்டராமர் கோவிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES