முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » துலிப் மலர்களை பார்க்க ஆசையா? - இதுதான் சரியான டைம்... இப்போவே ஸ்ரீநகருக்கு டிக்கெட் போடுங்க..!

துலிப் மலர்களை பார்க்க ஆசையா? - இதுதான் சரியான டைம்... இப்போவே ஸ்ரீநகருக்கு டிக்கெட் போடுங்க..!

மார்ச் 24 ஆம் தேதி, ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும்.

  • 17

    துலிப் மலர்களை பார்க்க ஆசையா? - இதுதான் சரியான டைம்... இப்போவே ஸ்ரீநகருக்கு டிக்கெட் போடுங்க..!

    குளிர் காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும் நேரம் காஷ்மீர் பகுதி அழகான துலிப்(tulip) மலர்களால் நிறைய காத்துகொண்டு இருக்கிறது. காஷ்மீரின் வண்ணங்கமயான சூழலை பார்க்க எண்ணினால் இந்த மாத இறுதி முதல் காஷ்மீருக்கு செல்ல திட்டத்தை போடுங்கள். படங்களிலும், பாடல்களிலும் பார்த்த துலிப் மலர்களை இந்தியாவில் நேரில் பார்க்கக்கூடிய சிறந்த நேரம் இதுதான்.

    MORE
    GALLERIES

  • 27

    துலிப் மலர்களை பார்க்க ஆசையா? - இதுதான் சரியான டைம்... இப்போவே ஸ்ரீநகருக்கு டிக்கெட் போடுங்க..!

    ஆம் மக்களே மார்ச் 24 ஆம் தேதி, ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும். ஏப்ரல் 3 முதல் 20 வரை, ஸ்ரீநகர் நகரம் இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்ட விழா என்றும் அழைக்கப்படும் வருடாந்திர துலிப் திருவிழா நடைபெற இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 37

    துலிப் மலர்களை பார்க்க ஆசையா? - இதுதான் சரியான டைம்... இப்போவே ஸ்ரீநகருக்கு டிக்கெட் போடுங்க..!

    பொதுவாக மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் தொடக்கம் வரை, துலிப் மலர்கள் பூக்கத் தொடங்கும். அதனால் இந்த நேரத்தில் வருடம் தோறும் துலிப் திருவிழா நடைபெறுகிறது. இதை பார்ப்பதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர்

    MORE
    GALLERIES

  • 47

    துலிப் மலர்களை பார்க்க ஆசையா? - இதுதான் சரியான டைம்... இப்போவே ஸ்ரீநகருக்கு டிக்கெட் போடுங்க..!

    புகழ்பெற்ற தால் ஏரியை அடுத்து அமைந்துள்ள இந்த தோட்டம் ஸ்ரீநகரின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் தோட்டமாகும். தோட்டத்தில் 1.5 மில்லியன் டூலிப் மலர்கள் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வகைகளைக் கொண்டுள்ளன.\

    MORE
    GALLERIES

  • 57

    துலிப் மலர்களை பார்க்க ஆசையா? - இதுதான் சரியான டைம்... இப்போவே ஸ்ரீநகருக்கு டிக்கெட் போடுங்க..!

    அழகான துலிப் மலர்களை மலை பகுதி முழுவதும் பார்ப்பது மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், உணவுக் கடைகள் மற்றும் காஷ்மீரின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் பல நிகழ்ச்சிகள் இந்த திருவிழாவில் இடம்பெறும்.

    MORE
    GALLERIES

  • 67

    துலிப் மலர்களை பார்க்க ஆசையா? - இதுதான் சரியான டைம்... இப்போவே ஸ்ரீநகருக்கு டிக்கெட் போடுங்க..!

    துலிப் பூக்கள் நீண்ட காலம் நீடிக்காது. பொதுவாக அவை மார்ச் இறுதியில் பூக்கத் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை இருக்கும். அதன் பின்னர் துலிப் மலர்களை பார்க்க முடியாது. அதனால் இந்த பூக்கும் காலத்தில் மட்டுமே இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.

    MORE
    GALLERIES

  • 77

    துலிப் மலர்களை பார்க்க ஆசையா? - இதுதான் சரியான டைம்... இப்போவே ஸ்ரீநகருக்கு டிக்கெட் போடுங்க..!

    இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டத்தை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையாளர்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு, நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு 60 ரூபாய் மற்றும் ஒரு குழந்தைக்கு ரூபாய் 25 ஆகும்.

    MORE
    GALLERIES