ரயிலில் பயணிக்கும் போது ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஸ்டேஷன் அல்லது ரயில்வே கிராஸ்ஸிங் வரும் இடங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்கள் வந்தால் ஒரு ரயில் நிறுத்தப்பட்டு, மற்றொன்று சென்றபின்னர் இயக்கப்படும் இது முதலில் வருபவருக்கு முன்னுரிமை எந்த அடிப்படையில் நடக்காது என்பது உங்களுக்கு தெரியுமா?
அதற்கு என்று தனி அட்டவணை உள்ளது அதன்படி தான் ரயில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், சாதா ரயில், எக்ஸ்பிரஸ், ராஜதானி, வந்தே பாரத் என்று வகைவகையான ரயில் பெயர்களை கேட்டிருப்பீர்கள். அதில் எப்போதும் மற்ற ரயில்களை நிறுத்திவிட்டு முன்னேறும் ராஜ்தானியையே நிறுத்தி சில ரயில்கள் கடந்து செல்கின்றன. வாருங்கள், இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் பல்வேறு ரயில்களின் முன்னுரிமை வரிசை என்ன என்பதை அறியலாம்.
சாதாரண நாட்களில் இயங்கும் ரயில்களைப் பற்றி பேசினால், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தான் அதிக முன்னுரிமை கொண்ட ரயில். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டின் தலைநகரான டெல்லிக்கு செல்லும் இந்த ரயில் சரியான நேரத்திற்கு சென்றைய வேண்டும் என்பதால் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டு வழி விடப்படுகிறது. தலைநகருக்கான மரியாதை அது.
இப்போது வந்தே பாரத் அறிமுகம் ஆன பின்னர் அதிக முக்கியத்துவம் பெரும் ரயில்கள் பட்டியலில் பிரிவில் வந்தே பாரத்தும் சேர்ந்துள்ளது. தற்போது வரை முதல் நிலை முன்னுரிமை வழங்கப்படும் ராஜதானி எஸ்பிரெஸ்ஸும் சிறப்பு நிபந்தனைகளின் கீழ் இயங்கும் சில ரயில்கள் தண்டவாளத்தில் வரும்போது, நிறுத்திவைக்கப்படுகிறது.எப்போது தெரியுமா?
இந்திய ஜனாதிபதி பயன்படுத்தும் ரயிலுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர் செல்லும் ரயிலுக்கு முன்னால் ஓடும் அனைத்து ரயில்களையும் நிறுத்தி விட்டு வழி விட வேண்டும் என்பதும் விதி. ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தற்போது ஜனாதிபதி ரயில் பயணத்தை விட விமானத்தில் தான் அதிகம் பயணம் செய்கிறார். அதனால்தான் இப்போது அதன் செயல்பாடு கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.