முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

இந்த கோடையிலும் ஒரு சில இடங்களில்  பனிப்பொழியும் என்று சொன்னால் நம்புவீர்களா? கோடையில் இந்தியாவில் பனிபொழியும் இடங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

  • 19

    இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

    குளிர்காலம் முடிந்து கோடை காலம் கொளுத்திக்கொண்டு இருக்கிறது. அடிக்கும் வெயிலுக்கு குளிரான ஸ்பாட் கிடைக்காதா என்று எல்லோரும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கோடையிலும் ஒரு சில இடங்களில்  பனிப்பொழியும் என்று சொன்னால் நம்புவீர்களா? கோடையில் இந்தியாவில் பனிபொழியும் இடங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 29

    இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

    சிக்கிமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள யும்தாங் பள்ளத்தாக்கு, கோடைக் காலங்களிலும் பனிப்பொழிவைப் பெறும் இந்தியாவின் அழகிய இடங்களில் ஒன்றாகும். உண்மையில், இங்குதான் ஆண்டு முழுவதும் பனியைக் காணலாம். சிக்கிமின் மலர் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் இந்த இடத்திற்கு அருகில் லாச்சுங் பள்ளத்தாக்கு உள்ளது. மேலும் லாச்சுங்கிலிருந்து 40 கிமீ மேலே ஜீரோ பாயின்ட் உள்ளது. எல்லாமே செம ஸ்பாட்கள்.

    MORE
    GALLERIES

  • 39

    இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

    காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் வசதியாக அமர்ந்திருக்கும் பஹல்காம், இமயமலை மலைகள் மற்றும்  உயரமான பைன் காடுகளுடன் மெல்லிய பனியால் மூடப்பட்டிருப்பதால், இந்த கோடைக்கு ஏற்ற குளுகுளு இடமாக இருக்கும்

    MORE
    GALLERIES

  • 49

    இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

    லடாக் பிராந்தியத்தின் மேற்கில் அமைந்துள்ள ட்ராஸ், பள்ளத்தாக்கு நாட்டின் மிகவும் குளிரான அதே சமயம்  மக்கள் வசிக்கும் பகுதியாக அறியப்படுகிறது. லடாக்கின் நுழைவாயில் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் ட்ராஸ், 10990 அடி உயரத்தில் அமர்ந்திருக்கிறது, கோடையிலும் பனிப்பொழிவை பார்க்க நினைத்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது . எனவே உங்கள் பயணத்தை இப்போதே திட்டமிடுங்கள்,

    MORE
    GALLERIES

  • 59

    இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

    கோடை காலத்தில் பனிப்பொழிவைக் காணும் மற்றொரு  சுற்றுலாத் தலமாக லே உள்ளது. குளிர்காலத்தில், உறைந்துகிடக்கும்  இந்த இடம் கோடைக்காலத்தில்  பார்வையிட சிறந்த நேரம். லடாக்கின் பல அற்புதமான இடங்களும் உள்ளது. அதை விட சில முக்கிய சாகச விளையாட்டு ஸ்பாட்களும் இங்கே உள்ளது

    MORE
    GALLERIES

  • 69

    இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

    ஜம்மு மற்றும் காஷ்மீர் இமயமலைச் சிகரங்களின் பின்னணியில், குல்மார்க் குளிர்காலத்தில் மட்டுமல்ல, கோடை காலங்களிலும் பயணிக்கத் தகுந்த இடமாக அமைகிறது. வானிலை இனிமையாக இருக்கும் மற்றும் குல்மார்க் பொதுவாக கோடைகாலத்தில் கூட புதிய பனிப்பொழிவைப் பெறும்.

    MORE
    GALLERIES

  • 79

    இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

    உத்தரகாண்ட் பித்தோராகர் மாவட்டத்தில் 7200 அடி உயரத்தில் அமைந்துள்ள முன்சியாரி இமயமலையின் பனி மூடிய மலைகளில் அமைந்துள்ளது. இது கோரிகங்கா ஆற்றின் கரையில் பனி படர்ந்த சிகரங்களால் சூழப்பட்டிருப்பதால், கோடைக்காலத்தில் இந்த இடத்திற்குச் செல்வது, கொளுத்தும் வெப்பத்தை மறந்து, உங்களை சில்லென்று வைத்திருக்கும்

    MORE
    GALLERIES

  • 89

    இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

    கிழக்கு சிக்கிமில் உள்ள ஜூலுக் ஒரு சிறந்த  கோடைகால இப்பயண திட்டமாக இருக்கும். கிட்டத்தட்ட 10000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைதியான இமயமலை கிராமம், காஞ்சன்ஜங்கா உட்பட கிழக்கு இமயமலை மலையின் மயக்கும் காட்சிகளை வழங்குகிறது. லுங்துங், கலாபோக்ரி ஏரி மற்றும் நாதாங் பள்ளத்தாக்கு ஆகியவை சுலுக்கில் பார்க்க சிறந்த இடங்கள்.

    MORE
    GALLERIES

  • 99

    இந்தியாவில் கோடை காலத்திலும் பனிப்பொழிவா? இந்தியாவில் இருக்கும் ஜிலுஜிலு இடங்கள்!

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய் உயரமான மலைப்பாதைகளில் ஒன்றாகும். மேலும் இது பிர் பஞ்சால் மலைத்தொடரில் 13050 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பாஸ் குலு பள்ளத்தாக்கு, லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குகளுடன் இணைக்கப்படுகிறது. வழக்கமாக மே முதல் நவம்பர் வரை திறந்திருக்கும்.

    MORE
    GALLERIES