குளிர்காலம் முடிந்து கோடை காலம் கொளுத்திக்கொண்டு இருக்கிறது. அடிக்கும் வெயிலுக்கு குளிரான ஸ்பாட் கிடைக்காதா என்று எல்லோரும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கோடையிலும் ஒரு சில இடங்களில் பனிப்பொழியும் என்று சொன்னால் நம்புவீர்களா? கோடையில் இந்தியாவில் பனிபொழியும் இடங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
சிக்கிமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள யும்தாங் பள்ளத்தாக்கு, கோடைக் காலங்களிலும் பனிப்பொழிவைப் பெறும் இந்தியாவின் அழகிய இடங்களில் ஒன்றாகும். உண்மையில், இங்குதான் ஆண்டு முழுவதும் பனியைக் காணலாம். சிக்கிமின் மலர் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் இந்த இடத்திற்கு அருகில் லாச்சுங் பள்ளத்தாக்கு உள்ளது. மேலும் லாச்சுங்கிலிருந்து 40 கிமீ மேலே ஜீரோ பாயின்ட் உள்ளது. எல்லாமே செம ஸ்பாட்கள்.
லடாக் பிராந்தியத்தின் மேற்கில் அமைந்துள்ள ட்ராஸ், பள்ளத்தாக்கு நாட்டின் மிகவும் குளிரான அதே சமயம் மக்கள் வசிக்கும் பகுதியாக அறியப்படுகிறது. லடாக்கின் நுழைவாயில் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் ட்ராஸ், 10990 அடி உயரத்தில் அமர்ந்திருக்கிறது, கோடையிலும் பனிப்பொழிவை பார்க்க நினைத்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது . எனவே உங்கள் பயணத்தை இப்போதே திட்டமிடுங்கள்,
உத்தரகாண்ட் பித்தோராகர் மாவட்டத்தில் 7200 அடி உயரத்தில் அமைந்துள்ள முன்சியாரி இமயமலையின் பனி மூடிய மலைகளில் அமைந்துள்ளது. இது கோரிகங்கா ஆற்றின் கரையில் பனி படர்ந்த சிகரங்களால் சூழப்பட்டிருப்பதால், கோடைக்காலத்தில் இந்த இடத்திற்குச் செல்வது, கொளுத்தும் வெப்பத்தை மறந்து, உங்களை சில்லென்று வைத்திருக்கும்
கிழக்கு சிக்கிமில் உள்ள ஜூலுக் ஒரு சிறந்த கோடைகால இப்பயண திட்டமாக இருக்கும். கிட்டத்தட்ட 10000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைதியான இமயமலை கிராமம், காஞ்சன்ஜங்கா உட்பட கிழக்கு இமயமலை மலையின் மயக்கும் காட்சிகளை வழங்குகிறது. லுங்துங், கலாபோக்ரி ஏரி மற்றும் நாதாங் பள்ளத்தாக்கு ஆகியவை சுலுக்கில் பார்க்க சிறந்த இடங்கள்.