முகப்பு » புகைப்பட செய்தி » உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்து வரும் இந்த இடங்களை சீக்கிரம் பார்த்துவிடுங்கள்..!

உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்து வரும் இந்த இடங்களை சீக்கிரம் பார்த்துவிடுங்கள்..!

சில நொடிகளில் பெரிய பெரிய பனிப்பாறைகள் சரிந்து கடலில் கலக்கும் வீடியோக்களை பார்த்திருப்போம். அதனால் தான் உலகின் ஆபத்தான இடம் என்று சொல்கிறோம்.

  • 18

    உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்து வரும் இந்த இடங்களை சீக்கிரம் பார்த்துவிடுங்கள்..!

    'லைஃப்ல த்ரில் இல்லைனா எப்படி பாஸ்" என்று ஒரு சிலர் ரிஸ்க் நிறைந்த இடங்களாக தேடி தேடி பயணம் செல்வார்கள். அப்படிப்பட்டவர்கள் உலகின் உயர்ந்த இடமாக இருந்தாலும் சூடான இடமாக இருந்தாலும் உலகின் கடைசி இடமாக இருந்தாலும் போக ரெடியாக இருப்பார்கள்.

    MORE
    GALLERIES

  • 28

    உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்து வரும் இந்த இடங்களை சீக்கிரம் பார்த்துவிடுங்கள்..!

    அப்படி பூமியின் கடைசியில் உள்ள உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்துவரும் ஒரு இடத்தை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மனிதர்கள் வாழாத ஒரு இடத்தில்  உள்ள பார்க்கக்கூடிய இடங்களை பற்றித்தான் உங்களுக்கு சொல்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 38

    உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்து வரும் இந்த இடங்களை சீக்கிரம் பார்த்துவிடுங்கள்..!

    அதனால் இங்கு மனிதர்கள் ஆண்டு முழுவதும் வாழ முடியாது. வெயில் காலத்தில்  சில ஆராய்ச்சிகள் செய்ய ஆய்வாளர்கள் செல்கின்றனர். வாழாத் தகுதியற்ற நிலத்தில் நாம் சென்று பார்வையிட சில முக்கிய இடங்கள் உள்ளன. போவதற்கு கொஞ்சம் நிறைய விண்ணப்பங்கள் போடவேண்டும் என்றாலும் பார்க்கத் தகுந்த இடங்கள் தான்.

    MORE
    GALLERIES

  • 48

    உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்து வரும் இந்த இடங்களை சீக்கிரம் பார்த்துவிடுங்கள்..!

    அண்டார்டிகா கண்டத்தின் மிக உயரமான சிகரத்தின் பெயர் மவுண்ட் வின்சன். சுமார் 4,892 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரம் வின்சன் மாசிஃப் என்றும் அழைக்கப்படுகிறது. பத்மஸ்ரீ டாக்டர் அருணிமா சின்ஹா ​​இந்த மலை உச்சியில் இந்தியக் கொடியை ஏற்றியிருக்கிறார். அதன் பின்னர் பலரும் இந்த பனிமலையை எற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 58

    உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்து வரும் இந்த இடங்களை சீக்கிரம் பார்த்துவிடுங்கள்..!

    அண்டார்டிக் தீபகற்பம்  அண்டார்டிகா கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீபகற்பம் சுற்றுலாவிற்கு ஏற்ற  இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் 'பனிக்காடுகளின் வீடு' என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள மலைச் சிகரங்களும், பெரிய பனிப்பாறைகளும் மக்களைக் கவருகின்றன. அது மட்டும் இல்லாமல் இங்கு அதிக எண்ணிக்கையிலான பெங்குவின்களைப் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 68

    உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்து வரும் இந்த இடங்களை சீக்கிரம் பார்த்துவிடுங்கள்..!

    அண்டார்டிகாவில் சுற்றுலாவில் மற்றொரு முக்கிய இடம் தெற்கு ஷெட்லேண்ட் தீவுகள். முற்றிலும் பனியால் மூடப்பட்ட இந்த தீவு அண்டார்டிக் தீபகற்பத்திற்கு வடக்கே 160 கிமீ தொலைவில் உள்ளது.தெற்கு ஷெட்லேண்ட் தீவில் உள்ள ஆராய்ச்சி மையங்களுக்கு கோடைபருவத்தில் செல்ல வேண்டும். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்தியாவின் மைத்ரி, பாரதி என்ற ஆய்வகங்கள் கூட உள்ளன,

    MORE
    GALLERIES

  • 78

    உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்து வரும் இந்த இடங்களை சீக்கிரம் பார்த்துவிடுங்கள்..!

    புவி வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனி சமீப காலத்தில் வேகமாக உருகி வருகிறது. தேசிய பனி மற்றும் உரைபனி தரவு மையத்தின் படி, பிப்ரவரி 2023 இல், அண்டார்டிகாவில் 19.1 லட்சம் சதுர கி.மீ பனி உருகியது. அதேசமயம், 2022 பிப்ரவரியில் 19.2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பனி உருகியது.

    MORE
    GALLERIES

  • 88

    உலகின் ஆபத்தான அதே நேரம் அழிந்து வரும் இந்த இடங்களை சீக்கிரம் பார்த்துவிடுங்கள்..!

    1979 முதல், அண்டார்டிகாவின் நிலைமை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அண்டார்டிகாவின் பனி கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக உருகி வருகிறது. சில நொடிகளில் பெரிய பெரிய பனிப்பாறைகள் சரிந்து கடலில் கலக்கும் வீடியோக்களை பார்த்திருப்போம். அதனால் தான் உலகின் ஆபத்தான இடம் என்று சொல்கிறோம்.

    MORE
    GALLERIES