முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்தியாவில் இருக்கும் உலகின் பழமையான செயற்கை துறைமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் இருக்கும் உலகின் பழமையான செயற்கை துறைமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிக சமூகத்தில்  துறைமுகம் கட்டும் கலையில் வல்லுனர்கள்  வாழ்ந்த இடமாக  லோத்தல்  இருந்துள்ளது

  • 18

    இந்தியாவில் இருக்கும் உலகின் பழமையான செயற்கை துறைமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    இன்று நம் உலகில் லட்சக்கணக்கான துறைமுகங்கள் உள்ளன. இந்தியாவில் எடுத்துக்கொண்டால் 13 பெரிய துறைமுகங்கள் (12 அரசுக்கு சொந்தமானது  மற்றும் ஒரு தனியார் துறைமுகம்) மற்றும் 187 அறிவிக்கப்பட்ட சிறு மற்றும் இடைநிலை துறைமுகங்கள் உள்ளன. ஆனால் இதற்கு எல்லாம் தொடக்க புள்ளி எது என்று தெரிய வேண்டாமா?

    MORE
    GALLERIES

  • 28

    இந்தியாவில் இருக்கும் உலகின் பழமையான செயற்கை துறைமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    உலகின் பழமையான மனிதனால் உருவாக்கப்பட்ட துறைமுகம் நம் இந்தியாவில் தான் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா?இந்தியாவின் பழமையான நாகரிகம் என்று சொல்லப்படும்,  சிந்து சமவெளி நாகரிகத்தின் வர்த்தக நகரமாக இருந்த லோத்தல் தான் உலகின் பழமையான துறைமுகத்தைக் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 38

    இந்தியாவில் இருக்கும் உலகின் பழமையான செயற்கை துறைமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    இன்றைய குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தல் நகரத்தில்,  சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிக சமூகத்தில்  துறைமுகம் கட்டும் கலையில் வல்லுனர்கள்  வாழ்ந்த இடமாக  லோத்தல்  இருந்துள்ளது. இந்த கிராமம் அகமதாபாத்தில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    இந்தியாவில் இருக்கும் உலகின் பழமையான செயற்கை துறைமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    லோத்தல்,  இறந்தவர்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது . ஏனெனில் குஜராத்தியில் லோத்தல் என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளால் ஆனது. லோத் மற்றும் தால் அதாவது இறந்தவர்களின் மேடு என்று பொருள்.

    MORE
    GALLERIES

  • 58

    இந்தியாவில் இருக்கும் உலகின் பழமையான செயற்கை துறைமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான லோத்தல் மினி ஹரப்பா என்றும் அழைக்கப்படுகிறது. சபர்மதி ஆற்றின் பழைய கிளையுடன் இணைக்கப்பட்ட  இந்த நகரத்தில் வெளிநாடுகளுடன் வணிகம் செய்து பழகிய துறைமுகம் ஒன்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    இந்தியாவில் இருக்கும் உலகின் பழமையான செயற்கை துறைமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    இந்திய தொல்லியல் துறை 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது. இது 19 மே 1960 அன்று முடிவடைந்தது. அந்த ஆய்வில் இந்த நகரம் கிமு 3700 இல் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் இது குஜராத்தில் உள்ள சிந்து முதல் சௌராஷ்டிரா வரையிலான நதி வழியாக ஒரு முக்கிய வணிகமாக இருந்துள்ளது. எகிப்து மற்றும் மெசபடோமியாவுடன் வணிகம் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    இந்தியாவில் இருக்கும் உலகின் பழமையான செயற்கை துறைமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    இவை அக்காலத்தின் முக்கியமான வர்த்தக நகரமாக இந்த இடம் இருந்ததை சான்றுகளுடன் கூறுகின்றன.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கால்வாய்கள், செயற்கையான  மனிதனால் உருவாக்கப்பட்ட கப்பல்துறைகள், ஏலம் எடுக்கும் தொழிற்சாலைகள், குடோன்கள், வடிகால் அமைப்புகள் போன்றவற்றை  கண்டறிந்துள்ளனர். அதன் பின்னர் இந்த இடத்தின் முக்கியத்துவம் கருதி இந்த இடத்தை  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

    MORE
    GALLERIES

  • 88

    இந்தியாவில் இருக்கும் உலகின் பழமையான செயற்கை துறைமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    மேலும் இங்கு இருந்து எடுக்கப்பட்ட  பொருட்களை அருகிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர். அங்கு கிமு 3000 ஆண்டுகளில் இருந்து நகைகள், மட்பாண்டங்கள், முத்திரைகள், மத சின்னங்கள் போன்ற பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்

    MORE
    GALLERIES