முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பாரத் கௌரவ் ரயில் மூலம் ராமாயண யாத்திரை..! முழு விவரம்..

பாரத் கௌரவ் ரயில் மூலம் ராமாயண யாத்திரை..! முழு விவரம்..

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசின் ஆணைக்கிணங்க, நாட்டின் முக்கியமான நகரங்களை இணைக்குமு் வகையில் ராமாயண யாத்திரை என்ற ரயில் பயணத்தை இந்திய ரயில்வே தொடங்க உள்ளது.

  • 17

    பாரத் கௌரவ் ரயில் மூலம் ராமாயண யாத்திரை..! முழு விவரம்..

    ராமாயண யாத்திரை என்ற திட்டத்தின் கீழ் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி புதுதில்லியில் இருந்து "ராமாயண யாத்திரை" புறப்பட உள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி, பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி உள்ளிட்ட ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல முக்கிய இடங்களை இந்த யாத்திரை உள்ளடக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். டில்லியில் இருந்து புறப்படும் ரயில், அயோத்தியில் நிறுத்தப்படும். அங்கு ராமஜென்ம பூமி, ஹனுமான் கோயில் ஆகியவற்றை தரிசித்து விட்டு சரயு ஆரத்தியில் கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 27

    பாரத் கௌரவ் ரயில் மூலம் ராமாயண யாத்திரை..! முழு விவரம்..

    18 நாட்கள் பயணமான ராயமாயண யாத்திரையின் அடுத்த கட்டமாக இந்த ரயில் பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் நிற்கும். அங்கு சீதை பிறந்த இடத்தை பயணிகள் தரிசிக்கலலாம். மேலும் ஜனக்பூரில் இருக்கும் ராம் ஜானகி கோவிலையும் பயணிகள் பார்க்கலாம். ஜனக்பூரைத் தொடர்ந்து பக்சர் நகரில் கஙடகா ஸ்நானம் செய்யும் வகையில் ரயில் நிறுத்தப்படும். தொடர்ந்து வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், பத்ராசலம், நாக்பூர் மற்றும் நந்திகிராம் ஆகிய பகுதிகளுக்கும் ரயில் செல்லும்.

    MORE
    GALLERIES

  • 37

    பாரத் கௌரவ் ரயில் மூலம் ராமாயண யாத்திரை..! முழு விவரம்..

    உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் "தேகோ அப்னா தேஷ்" மற்றும் "ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்" திட்டத்தின் கீழ் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கும் முயற்சியை இந்திய ரயில்வே முன்னெடுத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    பாரத் கௌரவ் ரயில் மூலம் ராமாயண யாத்திரை..! முழு விவரம்..

    இந்த ராயமாயண யாத்திரைக்காக பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயில் இயக்கப்பட உள்ளது. இது முற்றிலும் குளிரூட்டப்பட்ட ரயிலாகும். இந்த சிறப்பு ரயிலில் உணவகம் உள்ளது. பயணிகள் விருப்பம் போல் தங்களுக்கான உணவுகளை வாங்கிக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 57

    பாரத் கௌரவ் ரயில் மூலம் ராமாயண யாத்திரை..! முழு விவரம்..

    ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டிக்கும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்புக் காவலர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி, காசியாபாத், அலிகார், துண்ட்லா, எட்டாவா, கான்பூர் மற்றும் லக்னோ ரயில் நிலையங்களிலும் சுற்றுலாப் பயணிகள் ஏறலாம் இறங்கலாம். முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் கூபே எனப்படும் ஏசி பெட்டிகள் மட்டுமே இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    பாரத் கௌரவ் ரயில் மூலம் ராமாயண யாத்திரை..! முழு விவரம்..

    கூபே பெட்டியில் பயணிக்க நபர் ஒருவருக்கு 1, 68, 950 ரூபாயும், முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 1,46, 565 ரூபாயும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு 1,14, 065 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    பாரத் கௌரவ் ரயில் மூலம் ராமாயண யாத்திரை..! முழு விவரம்..

    இந்த கட்டணம் ரயில் பயணம், ஏசி அறையில் தங்க, இறங்கும் இடங்களில் ஏசி வாகனங்களில் சுற்றிப்பார்க்க மற்றும் உணவு ஆகியவற்றிறிகான கட்டணம் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது. இந்திய ரயில்வேயின் இணையதளமான ஐஆர்சிடிசி மூலம் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்

    MORE
    GALLERIES