கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்துச்செல்ல நல்ல நீர்நிலைகளை தேடிக்கொண்டு இருப்போம். பிரபலமான பகுதிகளில் எல்லாம் இப்போது கூட்டம் அலைமோதுவதால், கூட்டம் குறைவாக அதே நேரம், அமைதியாக இருக்கும் இடங்களுக்குப் போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அப்படி யோசிக்கும் ஆட்களுக்கு இதோ ஒரு அமைதியான , அழகான ஆற்றங்கரையை பற்றி தான் சொல்ல இருக்கிறோம்.
கோவை , திருப்பூர் , பொள்ளாச்சி பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ரொம்ப பக்கத்துலயே குளிர்ச்சியான சூழலுடன் இந்த ஸ்பாட் அமைந்திருக்கிறது. கோவையில் இருந்து 100 கிமீ தூரத்திலும் பொள்ளாச்சியில் இருந்து 60 கிமீ தொலைவிலும் கூளங்கள் ஆறு என்ற இடம் உள்ளது.வால்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் கூழாங்கல் ரிவர் வியூ பாயிண்ட் மற்றும் கூழாங்கள் ஆறு அமைந்துள்ளது.இது வால்பாறையில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
கூழாங்கல் ஆற்றை ஆறு என்று சொல்லும் அளவிற்கு மற்ற ஆறுகளை போல பெரிதாகவோ ஆழமாகவோ இருக்காது. பார்ப்பதற்கு ஓடை போலவே இருக்கும். அதனால் இங்கு நின்று நிதானமாக ஓடும் நதியைப் பார்க்கலாம். மேலும் புல்வெளிகள் சூழ்ந்த இடத்தில் நதிக்கு கீழே கூழாங்கற்கள் நிறைந்துள்ளன. அதனால் தான் கூழாங்கல் ஆறு என்றே பெயர் வந்துள்ளது.