முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

இந்தியாவில் இருக்கும் மாறுபட்ட நில அமைப்புகளையும் அதன் இருப்பிடங்களை பார்ப்போம்.

  • 113

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் அடையாளம் ஆகும். அது கலாச்சாரம், மதம், மொழி, இனத்திற்கு மட்டும் அல்லாது நில அமைப்பிற்கும் பொருந்தும். உலகத்தில் இருக்கும் 10 வகையான காலநிலையில் பெரும்பாலானவை இந்தியாவில் காணப்படுகிறது. அதே போல நில அமைப்புகளின் அநேக எல்லைகளையும் இங்கு பார்க்கலாம். அப்படி இந்தியாவில் இருக்கும் மாறுபட்ட நில அமைப்புகளையும் அதன் இருப்பிடங்களை பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 213

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பூமியின் துருவங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நீர் உறைந்து பனி உருவாகும். ஆனால் பூமியின் மத்திக்கு அருகே இருக்கும் இமயமலை அதீத உயரம் கொண்டதால் பனி நிறைந்த இடமாக உள்ளது. கோடைகாலத்திலும் இங்கு பனி நிலைத்து இருக்கிறது. இந்த பனி உருகி வட மாநிலங்களுக்கு நீர் மூலமாக உள்ளது. லடாக், ஜம்மு, உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் இந்த பனிமலைகளை காணலாம்

    MORE
    GALLERIES

  • 313

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    அல்பைன் அல்லது பனிமலை காடுகள் என்பது பனியில் அழுகாமல் இருக்க ஏற்ற கூர்மையான ஊசிமுனை இலைகள் கொண்ட பைன் மரங்கள் நிறைந்தது. உயரமான இந்த காடுகள் பனியின் குளிர்ச்சியிலும் உறையாமல் தாக்கு பிடித்து வாழும்தன்மை கொண்டது. இந்த காடுகளை லடாக், ஜம்மு, உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம் , சில உத்திர பிரதேச எல்லைகளில் காணலாம்.

    MORE
    GALLERIES

  • 413

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    பனி மலைக்கு கீழே புல்வெளிகள் நிறைந்து கிடைக்கும். இந்த இடங்களில் தான் அதிக விலங்குகளும் தேசிய பூங்காக்களும் அமைந்திருக்கும். உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் புல்வெளிகள் அதிகம் காணப்படுகிறது. அதே போல இந்த இடங்களுள் நதிகளில் ஏற்படும் பள்ளத்தாக்குகள் அதிகம் காணப்படும்.

    MORE
    GALLERIES

  • 513

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    கங்கை நீர் பிடிப்பு பகுதி மொத்தமும் நீர் வளமான விவசாய நிலமாக இருக்கும். நதி பொறுமையாக செல்லும் சமப்பகுதி என்பதால் மக்கள் அதிகம் வாழும் இடமாக இவை இருக்கும். உத்திரபிரதேசம், குறிப்பாக ஹரிந்தவர், வாரணாசி, ப்ரயக்ராஜ் , பீஹார், ஜார்கண்ட் போன்ற இடங்கள் இதற்கு உதாரணங்கங்கள் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 613

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    காடுகள் என்று எடுக்கும் போது பசுமையான ஒரு காட்சி தான் நம் கண்முன் விரியும். அப்படி அடர்ந்து கிடைக்கும் காடுகளுக்கு உதாரணம் மேற்கு தொடர்ச்சி மழையும் வடகிழக்கு மாநிலங்களும் தான். தொடர்ச்சியான அதே நேரம் அதிக மழை பெறுவதால் புசுமை மாற்றம் இருந்தும் செழுமையான மேற்கு தொடர்ச்சி மலை பசுமை மாறா காடுகளின் உதாரணம் ஆகும். இங்கு அருவிகளும், ஏரிகளும் அதிகம்.

    MORE
    GALLERIES

  • 713

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    உலகில் உள்ள பழமையான மடங்குமலைக்கு (old fold mountain ) ஆரவல்லி மலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நிலம் மடிந்து மலை உருவாகி உள்ளது. இதன் காடுகள் பெரும்பாலும் இலையுதிர் மரங்களை கொண்டிருக்கும்.

    MORE
    GALLERIES

  • 813

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    வடகிழக்கு இந்தியாவில் இருக்கும் பசுமை மாறா காடுகளில் ஒரு தனித்துவமான சிறப்பு உண்டு. அது தான் மேகாலயா மாநிலத்தில் உள்ள தட்டை மலைகள். இந்த மலைகளின் உச்சிகள் எல்லாம் தட்டையாக காணப்படும். அதன் மீது மக்கள் குடியேற்றம் இருக்கும். மலைகளுக்கு இடையிலும் தட்டையான நிலப்பரப்பே இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 913

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    கரையோரம் என்று எடுத்துக்கொண்டால் நிலமும் காலும் ஆறும் கலக்கும் சதுப்பு நிலங்கள் தான் முக்கியமானவை. வங்காளத்தில் இருக்கும் சுந்தரவனமும், தமிழகத்தில் உள்ள பிச்சாவரம் போன்றவை அலையாத்தி காடுகள் எனப்படும் சதுப்புநில காடுகளுக்கு சிறந்த உதாரணங்கள். இவை தான் பூமியின் கற்பனை உறிஞ்சும் சல்லடையில்.

    MORE
    GALLERIES

  • 1013

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    பாலைவனம் என்றதும் நினைவுக்கு வருவது தார் பாலைவனம் தான். நீர் இல்லாமல் வறண்ட மணல் பரப்பை கொண்டது. ஒட்டகங்கள், தனித்துவ ஜீப் போன்ற வாகனங்களின் மூலம் இந்த இடத்தை பார்க்கலாம். எங்கு திரும்பினும் மணல் என்ற வெப்பம் நிறைந்த இடம் இது.

    MORE
    GALLERIES

  • 1113

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    வறண்ட மணல் மட்டும் பாலைவனத்தை உருவாக்காது. உப்பு நிறைந்த விவசாயம் செய்ய முடியாத இடமும் பாலை வானம் தான் . அப்படியான உப்பு பாலைவனம் குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியில் உள்ளது. பல திரைப்படங்களில் பாடல்கள் படமாக்க பயன்படும் இது வெண்ணிற பாலைவனம் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 1213

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    பனியால் வறண்டு பாலைவனம் ஆன இடமும் இந்தியாவில் உள்ளது. லடாக்கில் 0 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலையில் உறைந்தே கிடைக்கும் இடம் தான் நுப்ரா (nubra )பள்ளத்தாக்கு. இங்கு நிலவும் பனிக்கு எந்த விவசாயமும் நடக்காது.

    MORE
    GALLERIES

  • 1313

    இந்தியாவில் மட்டும் வேறுபட்ட நிலப்பரப்புகள் இத்தனை இருக்கா..? இவற்றை எங்கெல்லாம் பார்க்கலாம்..?

    கடற்கரை என்று சொல்லும்போது கோவா, ஒடிசா கரைகளுக்கு ஈடு இணையே கிடையாது. கொங்கன் கரையோரம் உள்ள கோவை கடற்கரைகள் பெரிய திரிந்த நீர் மற்றும் பவளப்பாறை நிறைந்தவை. ஒடிசா கடற்கரைகள் தாழ்வான அதே சமயம் அரியவகை நீர்வாழ் உயிரினங்களை காணக்கூடிய இடம்.

    MORE
    GALLERIES