கோவை என்பது தமிழக கேரளா எல்லை கொண்ட ஒரு மாவட்டம். அதோடு அழகு கொஞ்சும் மலை அடுக்குகளை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைகள்தான் இரண்டு மாநிலங்களையும் பிரிக்கின்றன. ஆனால் இந்த மலைகளுக்கு நடுவே பாலக்காடு இணைக்கும் கணவாய் ஒன்று அமைந்துள்ளது. பாலக்காட்டுக் கணவாயின் தெற்கே அமைந்துள்ள மலைப் பகுதிதான் நெல்லியம்பதி. இது தான் வந்த அட்டகாசமான ஸ்பாட்.
போத்துண்டி அணை 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான அணைகளில் ஒன்று. இந்த அணையில் சுற்றுப்பயணிகளுக்காக பூங்கா, படகு சவாரி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த அணையை கடந்தால் வனத்துறை சோதனைச்சாவடி வரும். இந்த சித்தனை சாவடியில் நமது முழு விபரங்களை கொடுத்தல் மட்டுமே உள்ளே அனுமதிப்பார்கள். வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் அச்சாலையில் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அழகான இந்த மலைப்பாதையில் இருந்து பாலக்காட்டின் அழகை பார்க்கலாம். இங்குள்ள வியூ பாயிண்டுகளில் (view point) நின்று மலையின் அழகோடு படங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதன் பின்னர் பயணத்தை தொடர்ந்தால் தேயிலை, காப்பித் தோட்டங்கள் மற்றும் அதை சுற்றி நடமாடும் யானைகளை பார்க்கலாம். அதை கடந்து போனால் நெல்லியம்பதி நீர்வீழ்ச்சி இருக்கும். அதையும் பார்த்து விட்டு போனால் அடுத்து ஒரு வியூ பாயிண்டு இருக்கும்.
அங்கிருந்து தேயிலைத் தோட்டங்கள் வழியாக சென்றால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காரப்பாரா தொங்குப்பாலத்தை அடையலாம். அதை ஒட்டி காரப்பாரா அருவியும் உள்ளது. அழகான இந்த காட்சியை காண்பது மட்டுமல்லாமல் மாலை நேரத்தில் இந்த காடுகளின் இடையே மிளிரும் ஆயிரக்காண மின்மினி பூச்சிகள் உங்கள் கண்களை கொள்ளையடித்து விடும். அதே போல இந்த மலை படுதிகளில் ஜீப் சவாரி வசதியும் உள்ளது. இதன் மூலம் மலை காடுகளுக்குள் சென்று காட்டு விலங்குகளை பார்க்கும் வாய்ப்பும் உள்ளது.