முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

அடிக்கும் வெயிலுக்கு கொஞ்சம் குளிர் பிரதேசத்தில் போய் செட்டில் ஆனால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.

  • 110

    கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

    பிப்ரவரி மாதம் முடிந்துவிட்டது. ஆனால் அதற்குள் மே மாதம் வந்தது போல வெயில் கொளுத்துகிறது. எப்போது கோடை விடுமுறை வரும் எப்போது குளிர் பிரதேசங்களுக்கும் நீர்நிலைகளுக்கு ட்ரிப் போடலாம் என்று சிந்திக்கத் தொடங்கி விட்டனர் மக்கள். இந்நிலையில் அடிக்கும் வெயிலுக்கு கொஞ்சம் குளிர் பிரதேசத்தில் போய் செட்டில் ஆனால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரதேசங்கள் லிஸ்ட் இதோ!

    MORE
    GALLERIES

  • 210

    கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

    மலைகளின் அரசி என்ற பெருமையை சுமந்து நிற்பவள் நீலகிரி மலை தான். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அமைந்துள்ள முக்கியமான சிகரங்களில் ஒன்று தொட்டபெட்டா. அவலாஞ்சி ஏரி, தொட்டபெட்டா சிகரம், மான் பூங்கா, எமரால்டு ஏரி, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, கலஹட்டி நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, ஊட்டி மலை ரயில், ரோஸ் கார்டன் என்று பல சுற்றுலா தங்களை தன்னுள் ஒளித்துவைத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 310

    கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் காலநிலை பெரும்பாலும் மூடுபனி மற்றும் குளிர்ச்சியாக 14 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். தாவரவியல் பூங்காக்கள், ஏரிகள்,மலையோர கேம்ப் ஃபயர், பள்ளத்தாக்குகள் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக இருக்கும். அதுவும் குடும்பத்துடன் செல்வதற்கு பக்காவான ஸ்பாட்

    MORE
    GALLERIES

  • 410

    கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

    சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் குளிர்கால தாங்கும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இந்த மலையில் ஏறுவதற்கு 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 510

    கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

    தற்போதைய இளைஞர்கள் மத்தியில், பைக் ரைடு பிரபலமாகி வருகிறது. அதுமட்டும் அல்ல, அனைவரும் சோலோவாக பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு ஏலகிரி ஏற்ற இடமாக இருக்கும்.சென்னையில் இருந்து செல்வபவர்களுக்கு NH48 புறவழி சாலை பக்காவான வழியாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 610

    கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் தாண்டி அமைந்திருக்கும் அழகிய மலை தான் சிறுமலை. மலைகளின் சின்ன இளவரசி என்று அழைக்கப்படும் இங்கே பைக் ரைட், டென்ட், ட்ரெக்கிங் போவது சிறந்ததாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 710

    கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

    கொல்லிமலையானது நாமக்கல் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கடல்மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது நாமக்கல் நகரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலிகைகள் நிறைந்த இந்த மலையில் அறப்பலீசுவரர் கோவில், தோட்டக்கலை தோட்டம், மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் ஆகியவை உள்ளன

    MORE
    GALLERIES

  • 810

    கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

    ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மத்தியில் அமைந்துள்ள வால்பாறை, வணிகமயமாக்கலில் இருந்து கொஞ்சம் விலகி நிற்பதால் இயற்கையின் இளமையை அனுபவிக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கும். சாகச விரும்பிகள், சிறப்பு அனுமதி பெற்றால், புலிகளைக் கண்டறிய காப்பகத்திற்குள் சுற்றுலா செல்லலாம்.

    MORE
    GALLERIES

  • 910

    கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

    தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை கடல் மட்டத்தில் இருந்து 155 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியான இது தமிழா - கேரள எல்லையாக இருக்கிறது. இங்கு மகாராஜா மெட்டு, மணலாறு மற்றும், மேல்மணலாற போன்ற அணைகள், தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் தயாரிக்கும் கூடங்கள் முக்கிய சுற்றுலாத் தலங்களாகவும்.

    MORE
    GALLERIES

  • 1010

    கோடை வெயிலை தணிக்க தமிழ்நாட்டில் உள்ள குளுகுளு மலைப்பிரதேசங்கள் இதோ!

    ஊட்டி வரை செல்லும் பயணிகள் கோத்தகிரி வழியாக போனால் அதையும் சேர்த்து பார்த்துவிடலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் அழகை காண அற்புதமான வாய்ப்பாக இருக்கும். வரிசையாக அடுக்கிவைத்த சீட்டுக்காயுளை போல மேற்குத்தொடர்ச்சி மலைகளை காணலாம். தேயிலை மற்றும் காஃபி தோட்டங்களை கண்டு ரசிக்கலாம்.

    MORE
    GALLERIES