கீதா பவன், ரிஷிகேஷ்:: வாழ்க்கையில் ஒரு முறையாவது கங்கைக்கரைக்கு போய் செய்த பாவங்களை சரிசெய்ய வேண்டும் என்று நினைப்பர். அப்படி மக்கள் செல்லும் இடங்களில் ஒன்று ரிஷிகேஷ். ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கீதா பவன், ஆசிரமத்தில் 1000க்கும் மேற்பட்ட அறைகள் கொண்டு, பொது மக்கள் தங்க வசதி செய்து தருகிறது. ஆசிரமத்தில் லக்ஷ்மி நாராயண கோவில், மற்றும் நூலகம் உள்ளது. சுத்தமான சைவ உணவுகளை இங்கு உண்டு மகிழலாம்.
பாரத் ஹெரிடேஜ் சர்வீஸ், ரிஷிகேஷ்: இந்த இடம் மற்ற ஆசிரமங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த ஆசிரமத்தில் தாங்கும் வசதியோடு உடலுக்கும் மனதுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கே நீங்கள் தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் இலவச தங்குமிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆசிரமத்தில் பல வெளிநாட்டவர்களும் உள்ளனர்.
ஆனந்தாஷ்ரம், கேரளா:ஆனந்தாஷ்ரமத்தில் நீங்கள் எந்தச் செலவும் இல்லாமல் இயற்கையோடு இணைந்து வாழலாம். உங்கள் மனதை மிகவும் அமைதிப்படுத்த உதவும். பாபா ராமதாஸ் நிறுவிய இந்த ஆசிரமம் ஏல உயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்குவதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை.