என்று சொன்னதும் எல்லோருக்கும் கார்த்திகை மாதம் மலையின் மீது வைக்கும் ஜோதி, அண்ணாமலையார் கோவில் தான் நினைவுக்கு வரும். அது தான் பிரதான ஈர்ப்பாக இருப்பதால் அது அந்த ஊரின் அடையாளமாக மாறிவிட்டது. ஆனால் திருவண்ணாமலையில் கோவில் தவிர பல ஸ்பாட்கள் பார்க்க இருக்கின்றன. அவற்றை தான் இதில் பார்க்க இருக்கிறோம்.
கோடை விடுமுறை வேறு வந்துவிட்டது. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், பாண்டிச்சேரி மக்கள் தங்களுக்கு அருகிலேயே இருக்கும் ஜவ்வாது மலையைத் தேர்ந்தெடுக்கலாம், கிழக்கு தொடர்ச்சி மலையில் சுமார் 260 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலையில் ஏராளமான அரிய வகை மூலிகை செடிகள் கடந்து வரும் அருவிகள் , டிரெக்கிங் ஸ்பாட்கள் உள்ளன.
சிவன் கோவில் மட்டும் இல்லாமல் வேலூரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் ஆரணியை அடுத்த திருமலை எனும் ஊரில் சிறு குன்றின் மேல் சமணர் கோயில் ஒன்றும் உள்ளது. ஏறத்தாழ இதுவும் 1,000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் இயற்கையான நிறங்களை கொண்டு 15ம் நூற்றாண்டில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்போதும் இது அழியாமல் அப்படியே இருக்கின்றன.
காஞ்சிபுரத்தில் இருந்து வரும் மக்கள், வழியில் வந்தவாசி செல்லும் சாலையில் நரசமங்கலம் எனும் கிராமத்தில் மாமண்டூர் குடைவரைக்கோவிலை பார்க்கலாம். இங்குள்ள மலை குன்றில் மொத்தம் 4 குகைகள் , அதில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் , மலையின் வடக்கு பகுதியின் முடிவில் சமணர் படுகை, அதில் சில தமிழ் கல்வெட்டுகள் இருக்கின்றன. இந்த கல்வெட்டுக்கு வயது ஏறத்தாழ 2,000 ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது தவிர தடாகபுரிஸ்வரர் ஆலயம் மற்றும் மடம், கூழமந்தல் சோழீஸ்வரர் கோயில், பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வர்ர் கோயில், சாத்தனூர் அணை, முனுகப்பட்டு அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில், குரங்கணில் முட்டம் வாலிஸ்வரர் திருக்கோயில், படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில், தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோயில், ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வரர் கோயில், செய்யாறு அருள்மிகு வேதபுரிஸ்வரர் திருக்கோயில் மற்றும் பர்வதமலை ஆகியவை சுற்றிபார்க்க ஏற்ற இடமாகும்.