முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » 5 நதிகள் சங்கமிக்கும் இந்த புகழ்பெற்ற இடத்தை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்..!

5 நதிகள் சங்கமிக்கும் இந்த புகழ்பெற்ற இடத்தை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்..!

திரிவேணி சங்கமங்களை பார்த்துருப்போம். ஆனால் மஹாராஷ்ட்டிராவின் ஐந்து நதிகள் சங்கமிக்கும் பகுதியை கேட்டிருக்க மாட்டீங்க...

  • 16

    5 நதிகள் சங்கமிக்கும் இந்த புகழ்பெற்ற இடத்தை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்..!

    மகாராஷ்டிராவில் பல பழமையான கோவில்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன.  மகாராஷ்டிராவின் முக்கிய நகரமான நாக்பூரில் இருந்து 75 கிமீ தொலைவில் அம்போராவில் ஒரு முக்கியமான சிறப்பு வாய்ந்த கோவில் உள்ளது. அதன் சிறப்புகளை பற்றி தான் இந்த செய்தி தொகுப்பில்  உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 26

    5 நதிகள் சங்கமிக்கும் இந்த புகழ்பெற்ற இடத்தை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்..!

    திரிவேணி சங்கமங்களை பார்த்துருப்போம். ஆனால் இந்த பகுதி மஹாராஷ்ட்டிராவின் ஐந்து நதிகள் சங்கமிக்கும் பகுதியாக இருக்கிறது. குஹி தாலுக்காவில் உள்ள அம்போரா என்பது வைங்கங்கா, கன்ஹான், ஆம், முர்ஜா மற்றும் கோலாரி ஆகிய ஐந்து நதிகளின் சங்கமம் ஆகும். எனவே இந்த இடம் புவியியல் செழுமையுடன் காணப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    5 நதிகள் சங்கமிக்கும் இந்த புகழ்பெற்ற இடத்தை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்..!

    அதுமட்டும் இல்லாமல் இந்த சங்கம இடம், ஆன்மீக முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. 5 நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகே உள்ள குன்றில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள சிவன், சைதன்ய வடிவில்இருப்பதாக நம்புகின்றனர். அது மட்டும் இல்லாமல் ராமாயணத்தில், ராம-லக்ஷ்மணன் மற்றும் சீதை இந்த நதி வழியாக தான் அயோத்திக்கு திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மகாபாரதத்தில் பாண்டவர்கள் 5 பேரும் சில காலம் இங்கு வனவாசம் இருந்ததாக கூறுகிறார்.

    MORE
    GALLERIES

  • 46

    5 நதிகள் சங்கமிக்கும் இந்த புகழ்பெற்ற இடத்தை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்..!

    ஆன்மிகம் மட்டுமின்றி, அழகிய சுற்றுப்புறங்களுக்கும், இயற்கை அழகுக்கும் சாட்சியாக விளங்கும். அம்போராவிற்குள் நுழையும் போது வைங்கங்காவின் பரந்த நீர்த்தேக்கம் வலதுபுறத்தில் தெரியும். வைங்கங்கா அணையின் பின்புறம் ஒரு பெரிய நீர்த்தேக்கமும் பலம் ஒன்றும் உள்ளது. பாலத்தில் மீது இருந்து இந்த இடத்தின் அழகை ரசிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    5 நதிகள் சங்கமிக்கும் இந்த புகழ்பெற்ற இடத்தை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்..!

    பாலத்தின் நீளம் 705.20 மீட்டர் மற்றும் அகலம் 15.26 மீட்டர். இந்த பாலம் ஒரு முக்கிய போக்குவரத்து வழிமுறையாக மட்டுமல்லாமல், இப்பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பு சுற்றுலா தலமாகவும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாலத்தில் இருந்து சைதன்யேஸ்வரர் கோவில் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 66

    5 நதிகள் சங்கமிக்கும் இந்த புகழ்பெற்ற இடத்தை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்..!

    தர்மசாலாவுடன்,  அம்போரா பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு ஓய்வு அறைகள் மற்றும் தங்கும் வசதிகள் உள்ளன. அதுமட்டுமின்றி பாரம்பரிய உணவுகள், ரொட்டிகள், காய்கறிகளால் செய்யப்பட்ட கறிகள்,  என்று அனைத்தையும் சுவைக்க ஏற்ற பல ருசீகர உணவகங்களும் இங்கு உள்ளன.

    MORE
    GALLERIES