முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மறைந்துபோன மின்மினிப்பூச்சிகளை காண அறிய வாய்ப்பு.. இந்த திருவிழாவுக்கு போனால் பார்க்கலாம்.!

மறைந்துபோன மின்மினிப்பூச்சிகளை காண அறிய வாய்ப்பு.. இந்த திருவிழாவுக்கு போனால் பார்க்கலாம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள புருஷ்வாடி கிராமத்தில் ஆண்டுதோறும் மின்மினிப் பூச்சி திருவிழா நடைபெறுகிறது

  • 18

    மறைந்துபோன மின்மினிப்பூச்சிகளை காண அறிய வாய்ப்பு.. இந்த திருவிழாவுக்கு போனால் பார்க்கலாம்.!

    90 கிட்ஸ் வரை உள்ள அனைத்து சந்ததிகளும் இயற்கையை பார்த்து ரசித்து அதோடு ஒன்றி வாழ்ந்து வந்தவர்கள் தான். அதற்கான வாய்ப்பும், இயற்கை எழிலும், அதை ரசிக்கும் ஆர்வமும் குழந்தைகளிடம் இருந்து வந்தது. ஆனால் கட்டிட காடாக மாறிவிட்ட இன்றைய சமூகம் எல்லாவற்றையும் போட்டோக்களில் தான் பார்க்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 28

    மறைந்துபோன மின்மினிப்பூச்சிகளை காண அறிய வாய்ப்பு.. இந்த திருவிழாவுக்கு போனால் பார்க்கலாம்.!

    போனில் இருப்பது தான் உலகம்  என்று திரைகளுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு இயற்கையின் அழகை ரசிக்க கற்றுக்கொடுக்க ஒரு சில வாய்ப்புகள் உள்ளன. ட்ரெக்கிங் செல்வது அதில் ஒன்று. அப்போது விலங்குகள் பூச்சிகள், தவற இனங்களை குழந்தைகளுக்கு அடையாளம் காட்டலாம்.

    MORE
    GALLERIES

  • 38

    மறைந்துபோன மின்மினிப்பூச்சிகளை காண அறிய வாய்ப்பு.. இந்த திருவிழாவுக்கு போனால் பார்க்கலாம்.!

    மின்மினி பூச்சிகளை பார்ப்பது எல்லாம் ஒரு காலத்தில் பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இன்று அந்த பூச்சிகளை கண்டறிவதே அதிசயமாகிவிட்டது. ஆனால்  மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள புருஷ்வாடி கிராமத்தில் ஆண்டுதோறும் மின்மினிப் பூச்சி திருவிழா நடைபெறுகிறது.

    MORE
    GALLERIES

  • 48

    மறைந்துபோன மின்மினிப்பூச்சிகளை காண அறிய வாய்ப்பு.. இந்த திருவிழாவுக்கு போனால் பார்க்கலாம்.!

    வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், மழைக்காலத்திற்கு முன்பு இந்தத் திருவிழா நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் மூன்றாவது வாரம் தொடங்கி ஜூன் மூன்றாவது வாரம் வரை இந்த திருவிழா நடக்கவுள்ளது. மின்மினிகள் இங்குள்ள மேற்குதொர்ச்சி மலை காட்டுப்பகுதிக்கு வரும் காலத்தை கணக்கிட்டு இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 58

    மறைந்துபோன மின்மினிப்பூச்சிகளை காண அறிய வாய்ப்பு.. இந்த திருவிழாவுக்கு போனால் பார்க்கலாம்.!

    இந்த ஆண்டு சீக்கிரமே மின்மினி பூச்சிகள் வரத்து இருப்பதால் மே மாதத்திலேயே , மில்லியன் கணக்கான மின்மினிப் பூச்சிகள் சுற்றியுள்ள காடுகளை ஒளிரச் செய்யம் என்று எதிர்பார்க்கின்றனர். சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும். அதேபோல  இளைய சமூகத்திற்கு மின்மினிகளை  பழக்கப்படுத்தவும் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 68

    மறைந்துபோன மின்மினிப்பூச்சிகளை காண அறிய வாய்ப்பு.. இந்த திருவிழாவுக்கு போனால் பார்க்கலாம்.!

    திருவிழாவிற்கு வருபவர்கள் மின்மினிப் பூச்சிகளைக் காண காட்டு வழியாக இரவு நடைப்பயணம், பாரம்பரிய கிராமிய அனுபவங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை அனுபவிக்க முடியும். இந்த திருவிழா பார்வையாளர்களுக்கு உள்ளூர் சமூகத்தின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிய ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 78

    மறைந்துபோன மின்மினிப்பூச்சிகளை காண அறிய வாய்ப்பு.. இந்த திருவிழாவுக்கு போனால் பார்க்கலாம்.!

    மேலும் இது கிராம மக்களுக்கு வேலைகளை வழங்கி  உள்ளூர் வணிகங்களை ஆதரிக்க உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல்  இந்த திருவிழா பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பில் சுற்றுலாவின் தாக்கம் மற்றும் பொறுப்பான சுற்றுலா நடைமுறைகளின் தேவை பற்றிய கவலைகளையும் எழுப்பியுள்ளது . அதே போல பூச்சி இனங்களை அழியாமல் பார்த்துக்கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 88

    மறைந்துபோன மின்மினிப்பூச்சிகளை காண அறிய வாய்ப்பு.. இந்த திருவிழாவுக்கு போனால் பார்க்கலாம்.!

     மும்பை, புனே அல்லது நாசிக்கில் இருந்து பேருந்து அல்லது டாக்ஸி மூலம் புருஷ்வாடியை அடையலாம். இந்த கிராமம் மும்பையிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும், புனேவிலிருந்து 225 கிலோமீட்டர் தொலைவிலும், நாசிக்கிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES