முகப்பு » புகைப்பட செய்தி » இமயமலை பகுதியில் 11,000 அடி உயரத்தில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் இருக்காம்!

இமயமலை பகுதியில் 11,000 அடி உயரத்தில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் இருக்காம்!

இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையே ஒரு பழங்கால வர்த்தக பாதையாக இது செயல்பட்டதாம். 

  • 17

    இமயமலை பகுதியில் 11,000 அடி உயரத்தில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் இருக்காம்!

    உலகின் சில பாலங்கள் உங்களுக்கு சுவாரசியமான அனுபவத்தோடு த்ரில்லிங் அனுபவத்தையும் சேர்த்து கொடுக்கும். சாகச விரும்பி தேடி தேடி போகும் இடங்களாகவும் இவை இருக்கும். உலகின் சிறந்த த்ரில்லிங் பாலம் சீனாவில் செங்குத்தான ஹுசாஷன் மலையின் அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    இமயமலை பகுதியில் 11,000 அடி உயரத்தில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் இருக்காம்!

    அதே போன்ற அழகான பாலம் ஒன்று இந்தியாவில் உள்ளது. உத்தரகாண்டில் உள்ள கர்டாங் கலி, ஆபத்து இல்லாமல், அந்த அனுபவத்திற்கு உங்களுக்குத் தரும். கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் உள்ள கங்கோத்ரி தேசியப் பூங்காவிற்குள் பாய்ந்து  கொண்டிருக்கும் ஜத் கங்கை நதியின் மீது தான் நங்கள் சொல்லும் பாலம் அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    இமயமலை பகுதியில் 11,000 அடி உயரத்தில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் இருக்காம்!

    150 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த பாலம் இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையே ஒரு பழங்கால வர்த்தக பாதையாக  செயல்பட்டதாம்.  உத்தரகாசி மாவட்டத்தில் நெலாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த மரப்பாலம்  உப்பு, கம்பளி, வெல்லம், மசாலா மற்றும் தோல் போன்ற பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. இந்த பாலம் நடுவில் பயன்படுத்தாமல் மூடப்பட்டிருந்தது.

    MORE
    GALLERIES

  • 47

    இமயமலை பகுதியில் 11,000 அடி உயரத்தில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் இருக்காம்!

    செக்போஸ்ட்டில் இருந்து சுமார் 2 கிமீ தூரம் எளிதான சாய்வு உயர்வு, அடர்ந்த தியோதர் காடுகளின் வழியாக கர்தாங் கலி பாலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 இல் 135 மீட்டர் நீளமும் 1.8 மீட்டர் அகலமும் கொண்ட படிக்கட்டுகள் வனத்துறை அதிகாரிகளால்  கட்டப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்காக பாலம் திறக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 57

    இமயமலை பகுதியில் 11,000 அடி உயரத்தில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் இருக்காம்!

    பாலத்தை நோக்கிச் செல்லும்போது காணும் நெலாங் பள்ளத்தாக்கு நீல பரல் (செம்மறி ஆடுகள்) மற்றும் பனிச்சிறுத்தை போன்ற அழிந்து வரும் விலங்குகளின் தாயகமாகவும் உள்ளது. அதோடு நதி ஓடும் கட்சிகளும் கண்ணை கவரும்.

    MORE
    GALLERIES

  • 67

    இமயமலை பகுதியில் 11,000 அடி உயரத்தில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் இருக்காம்!

    பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக, பாலத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே நடக்க அனுமதிக்கப்படுகிறார்கள்; அவர்கள் ஏறும் போது ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் தூரத்தை கடைபிடிக்கவேண்டும் என்ற விதியும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    இமயமலை பகுதியில் 11,000 அடி உயரத்தில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் இருக்காம்!

    மலையை வெட்டி உருவாக்கப்பட்ட பழைய பாலத்தோடு சேர்த்து தேவதாரு (இமயமலை சிடார்) மரங்களால் செய்யப்பட்ட மரக் கட்டைகளை வைத்தும்  இரும்பு ராடுகள் சேர்த்தும்  இன்று இருக்கும் புதிய பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES