நமது தேவைகளை குறைத்துக் கொண்டு முடிந்த அளவிற்கு எளிமையான வாழ்க்கை முறையை வாழ வேண்டும் என்பதை நீண்ட காலமாகவே பலர் கூறிவரும் ஒரு கருத்து தான். ஆனால் இந்த உண்மையின் இதன் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளவும் அதனை நடைமுறைப்படுத்தவும் பலருக்கும் சரியாக தெரிவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. எப்போது நான் புற உலக பொருள்களின் மீது உள்ள ஆசைகளை படிப்படியாக குறைத்துக் கொள்கிறோமோ அப்போதே நமது மனமானது புதிய அனுபவங்களை பெறுவதற்கு முழுமையாக தயாராகிறது.
இன்றைக்கு அதிக மக்கள் கலாச்சாரம், பண்பாடு மற்றும் புற உலக பொருட்களின் மீதுள்ள ஆசையினால் தங்களது வாழ்க்கை முழுவதுமே இதற்காக ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதை நீங்கள் அப்படியே மாற்றி உங்கள் தேவைகளை குறைத்துக் கொண்டு எளிமையான வாழ்க்கை முறையை வாழும் போது பல்வேறு வித நன்மைகளை நீங்கள் பெற முடியும். மேலும் மனதளவில் முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணருவீர்கள்.
அனுபவங்களின் கவனம் செலுத்துங்கள் : எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்கு முதலில் புற உலக பொருட்களின் மீது உள்ள ஆசையை குறைத்து கொண்டாலே உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்து, உங்களை முழுமையாக மாற்ற உதவும் அனுபவங்களை பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நமது கண் முன்னே பல்வேறு வித அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் நம்மால் அதனை முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. இதுவே தங்கள் தேவைகளை குறைத்துக் கொண்டு எளிமையாக வாழ்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் பயணம் செய்து அனுபவங்களை பெறுவதிலும் தங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுவதிலும், தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதிலுமே அதிகாரம் காட்டுவார்கள். இதன் காரணமாகத்தான் அவர்கள் தேவைகளை குறைத்துக் கொண்டாலும், மற்றவர்களை விட அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
நிகழ் காலத்தில் வாழ வேண்டும் : எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை பற்றி நினைத்து வருத்தப்படுவதும் எதிர்காலத்தில் வரப்போவது நினைத்து கவலைப்படுவதும் நம்மை மகிழ்ச்சியாக வைக்க உதவாது. இதுவே நீங்கள் நிகழ்காலத்தில் மனதை நிலை நிறுத்தி வாழ துவங்கும் போது, மிக எளிமையான விஷயங்களை கூட நீங்கள் ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். இவை உங்களை முழுமையாக்குவதோடு மகிழ்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.
சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் : நம்மில் பலரும் நல்ல வாழ்க்கை முறை அமைத்துக் கொள்வதற்கும் புற உலக பொருட்கள் மீது ஆசை கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், நம்முடைய சுதந்திரத்தை தவற விட்டு விடுகிறோம். அது போன்ற விஷயங்களை நீங்கள் காட்டும்போது அவை உங்களுக்கே தெரியாமல் உங்களை சுற்றி ஒரு எல்லையை வகுத்து விடும். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களை புறந்தள்ளி உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விஷயங்களில் மனதை செலுத்தும் போது கிடைக்கும் சுதந்திரமானது அனுபவித்து பார்த்தால் தான் புரியும்.
வாழ்க்கைக்கு முக்கியமானது எது என்பதில் தெளிவு வேண்டும் : வாழ்வில் எவை எல்லாம் முக்கியமானது என்பதை பற்றி தெளிவு ஒருவருக்கு தேவை. தேவையில்லாத விஷயங்களுக்கும் மற்றவர்கள் என்று நினைப்பார்கள் என்று எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல், உங்கள் வாழ்க்கையில் என்ன தேவை என்பதையும் நீங்கள் நினைத்ததை சாதிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் மனதில் நிறுத்தி அதற்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
மனதளவில் முழுமையாக இருக்க வேண்டும் :மேலே சொன்ன விஷயங்களின் முழு பொருளை உண்மையாக புரிந்து கொள்ளாத பலரும் இவை அனைத்தையும் தியாகங்களின் மூலமாக மட்டும்தான் பெற முடியும் என்று மனநிலையில் இருப்பார்கள். மேலே கூறப்பட்டுள்ள விஷயங்கள் எதுவும் தியாகம் செய்வதற்கான படிகள் அல்ல. அதற்கு பதிலாக நம்மை மகிழ்ச்சியாக வைத்து, முழுமையாக்குவதற்கான வழிமுறைகள் ஆகும். நாம் சரியான வகையில் புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான், நமது வாழ்வில் இருக்கும் பல்வேறு விஷயங்களையும் போற்றி பாராட்ட தவறிவிடுகிறோம். இவற்றை சரி செய்தாலே நம்மால் எளிமையான வாழ்க்கை அமைத்து முழுமையாக வாழ முடியும்.