முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தாம்பத்ய சிக்கல்.. கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும் செல்போன்!

தாம்பத்ய சிக்கல்.. கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும் செல்போன்!

ந்த நேரமும் செல்ஃபோனில் மூழ்கியிருப்பதால் பார்ட்னர் மீது எந்தவித ஈர்ப்பும் ஏற்படாது. இதனால் இருவருக்கும் இடையிலான தாம்பத்ய பந்தம் குறைந்து கொண்டே வரும்.

  • 18

    தாம்பத்ய சிக்கல்.. கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும் செல்போன்!

    கணவன், மனைவி தொலைதூரங்களில் இருக்கும்போது, வெவ்வேறு இடங்களில் தனித்து இருக்கும்போது இருவருக்கும் இடையிலான தொடர்பு பாலமாக செல்ஃபோன் விளங்குகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அருகாமையில் ஒரே வீட்டுக்குள் இருக்கும் சமயத்தில் கணவன், மனைவி இடையிலான நேரடி உரையாடல்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் செல்ஃபோன் அமைந்து விடுகிறது.

    MORE
    GALLERIES

  • 28

    தாம்பத்ய சிக்கல்.. கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும் செல்போன்!

    பொதுவாக தனி நபருக்கான செல்ஃபோன் அழைப்புகள், மெயில், வாட்ஸ் அப் மெசேஜ் போன்றவற்றுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதையும் தாண்டி சிலர் செல்ஃபோன்களில் மூழ்கிவிடுகின்றனர். ஏதோ ஒருநாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. இதுவே வாடிக்கையாக தொடரும்பட்சத்தில் கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும். செல்ஃபோன் பயன்பாடு காரணமாக கீழ்காணும் பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கும்போது, உங்கள் உறவில் விரிசல் ஏற்பட தொடங்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 38

    தாம்பத்ய சிக்கல்.. கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும் செல்போன்!

    நீடித்த கவனச்சிதறல் : வீட்டில் எல்லோரும் இயல்பாக உரையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில், நீங்கள் செல்ஃபோனில் எந்த தேவையும் இன்றி மூழ்கி இருப்பதும், நோட்டிஃபிகேஷன்களை தேடிக் கொண்டிருப்பதுமாக இருந்தால், நிச்சயம் உங்கள் பார்ட்னருடன் சண்டை வரும். ஆள் மட்டும் இங்கே இருக்கிறார், சிந்தனை வேறு எங்கோ உள்ளது என்ற எண்ணம் மோதலை உருவாக்கும்.

    MORE
    GALLERIES

  • 48

    தாம்பத்ய சிக்கல்.. கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும் செல்போன்!

    நெருக்கம் குறையும் : எந்த நேரமும் செல்ஃபோனில் மூழ்கியிருப்பதால் பார்ட்னர் மீது எந்தவித ஈர்ப்பும் ஏற்படாது. இதனால் இருவருக்கும் இடையிலான தாம்பத்ய பந்தம் குறைந்து கொண்டே வரும். பார்ட்னருடன் கொஞ்சி, அன்புடன் பேசுவதைக் காட்டிலும் சமூக ஊடகங்களில் ஸ்க்ரோல் செய்வது பிடித்தமானதாக மாறிப் போகும்.

    MORE
    GALLERIES

  • 58

    தாம்பத்ய சிக்கல்.. கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும் செல்போன்!

    நம்பிக்கை குறையும் : உங்கள் பார்ட்னருக்கு யார் ஃபோன் செய்கிறார்கள், யார் என்ன மெசேஜ் அனுப்பியுள்ளார்கள் என்பதை நீங்கள் அடிக்கடி சோதனை செய்யும் பட்சத்தில் இருவருக்கும் இடையிலான நம்பிக்கை குறையும். ஒரு கட்டத்தில் பொறாமை மற்றும் எரிச்சல் உணர்வு போன்றவை மேலோங்கும்.

    MORE
    GALLERIES

  • 68

    தாம்பத்ய சிக்கல்.. கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும் செல்போன்!

    தவறான புரிதல் : உங்கள் பார்ட்னரை கண்டு கொள்ளாமல் செல்ஃபோனும், கையுமாக வலம் வந்து கொண்டிருந்தால், உங்கள் மீது தவறான அபிப்ராயம் உருவாகும். தேவையற்ற வாதங்கள் உண்டாகும். செல்ஃபோனில் உங்கள் நண்பர்கள் அல்லது தோழிகள் கிண்டலாக எதையாவது அனுப்பியிருந்தால், அதை உங்கள் பார்ட்னர் தவறாக புரிந்து கொள்வார்கள்.

    MORE
    GALLERIES

  • 78

    தாம்பத்ய சிக்கல்.. கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும் செல்போன்!

    கவலை, மன அழுத்தம் அதிகரிக்கும் : சைபர்புல்லியிங் என்று சொல்லக் கூடிய இணையவழி வன்கொடுமைகளால் உங்கள் பார்ட்னர் பாதிக்கப்படும் பட்சத்தில், இதனால் அவர்களது மனநலன் பாதிக்கப்படும். ஸ்ட்ரெஸ் மற்றும் கவலை அதிகரிக்கும். இதுவே உங்கள் உறவு உடைந்துபோக காரணமக அமையும்.

    MORE
    GALLERIES

  • 88

    தாம்பத்ய சிக்கல்.. கணவன், மனைவி உறவில் விரிசலை உண்டாக்கும் செல்போன்!

    உணர்வுப்பூர்வமான பந்தம் அமையாது : பிற நபர்களுடனான உங்கள் தொடர்புகள் அனைத்தும் தொழில்நுட்ப ரீதியாக இருந்தால், சொந்த வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான பந்தத்திற்கு இடமிருக்காது. முடிந்தவரை ஒரு ஃபோன் அழைப்பில் சட்டென்று பேசி முடிக்கும் விஷயத்திற்கு நீண்ட நேரம் டெக்ஸ்டிங் அல்லது இமெயில் செய்வதை தவிர்க்கவும்.

    MORE
    GALLERIES